Sunday, January 5, 2020

தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து

2019ன் சிறந்த புத்தகங்கள் – 7



விலாஸ் சாரங் எனக்குப் பிடித்த மராத்தி எழுத்தாளர். ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதியவர். மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்தவர்.

இவரது சிறுகதைகள் The Women in Cages: Collected Stories  என்ற தொகுப்பாக வந்துள்ளது. அது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியிருக்கிறேன்.

விலாஸ் சாரங் எழுதிய The Dhamma Man என்ற நூலை தம்மம் தந்தவன் என்ற பெயரில் காளிப்ரஸாத் மொழியாக்கம் செய்திருக்கிறார்

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூல்  ஒரு மகனாக, கணவனாக, தந்தையாகப் புத்தர் ஏற்படுத்திய விளைவுகளை முதன்மைப்படுத்துகிறது. புத்தர் எவ்வாறு. தம்ம நாயகனாக உருமாறுகிறார் என்பதை விவரிக்கிறது.

புத்தன் ஒரு அவதார புருஷர்  என்பதற்கு மாற்றாக, சுகதுக்கங்களை அறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஞானியாகிறான் என்ற கோணத்தில் சாரங் விவரிப்பதே இதன் தனித்துவம்.

புத்தரின் வாழ்வை கவித்துவமான மொழியில்  சாரங் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறந்த மொழியாக்கம் நூலினை தமிழ்ப் படைப்பு போல வாசிக்கச் செய்கிறது.

காளி ப்ரஸாத்திற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

No comments: