Sunday, December 12, 2021

'ஆள்தலும் அளத்தலும்' குறித்த விமர்சனக் கூட்டம்

ஆள்தலும் அளத்தலும் விமர்சன கூட்டம் இன்று சிறப்பான முறையில் நிகழ்ந்த்து.. அங்கு அளித்த ஏற்புரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது






ஏற்புரை
 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் மோஹித்தே என்கிற கதை மிக எளிய ஒரு கதை. அந்த கதைதான் என் முதல் கதையான விடிவு என்கிற கதை நிகழ்ந்த சம்பவத்தை தொகுத்துக் கொள்ள உதவியது. அது ஒரு சிறுகதை எழுத்தாளன் என்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே சகமனிதர்கள் மீது நம்பிக்கையை  அளித்த  தருணம் என்று எனக்குக் காட்டியது.  நாஞ்சில்நாடன் என்னுடைய தொகுப்பிற்கு முன்னுரை எழுதி தந்தார். இன்னும் பேனாவில் எழுதும் அவர் முன்னுரை வந்த போது அதை பிரித்து பார்த்த தருணம் மிகவும் மலர்ச்சியாகவும் பெருமையாகவும் உணரச் செய்தது.  ஒரு விதத்தில் மன நிறைவும் அளித்தது. எனது தொகுப்பிற்கான முதல் அமர்வு அது. இந்த தருணத்தில் முதலில் அவருக்கு என் வணக்கமும் நன்றியும் 



முதல் கதை வெளியாக எழுத்தாளர்.சிவாகிருஷ்ணமூர்த்தி தான் காரணம். வெளியான பிறகு அதை எழுத்தாளர்.ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பினேன். அப்பொழுது நிகழ்ந்தவை எல்லாம் ஒரு முதல் சிறுகதை ஆசிரியர் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று. அந்தக் கதையுடன் சேர்த்து மேலும் அவருக்கு அனுப்பப்பட்ட பல சிறுகதைகளுக்கு அவர் நாளுக்கொன்றாக விமர்சனம் எழுதினார். அவர்களில் பலர் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக உள்ளனர். சுனில்,சிவாக்ருஷ்ணமூர்த்தி, இரா.செந்தில்குமார் வரிசையில் கடைசியாக நானும் தொகுப்பு வெளியிட்டு இணைந்து கொண்டேன். ஜெ. எழுதிய விமர்சனம் அதைத் தொடர்ந்து பிற வாசகர்கள் எழுதிய விமர்சனம் என பல நாட்கள் அந்த விமர்சனப் பதிவுகள் வெளியாயின. முதல் கதை கவனம் பெறுவதும் விமர்சிக்கப்படுவதும் அரிதான சூழலில் அதை சாத்தியப்படுத்தியவர் ஜெயமோகன் அவர்கள். மேலும் அப்போது அவர் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த சமயமும் அது.





அங்கு அவர் கூறிய கருத்துகள் விமர்சனங்கள் எல்லாம் பிற கதைகளை எழுதும்போது கவனத்தில் கொண்டிருக்கிறேன். அந்த குறைகளை தவிர்த்திருக்கிறேன். அதோடு இல்லாமல் இவ்வருட விஷ்ணுபுரம் விழாவில் எனக்கு இந்த தொகுப்பை  வைத்து ஒரு அமர்வும் அளித்திருக்கிறார். இதேபோல இதற்கு முந்தைய எனது மொழிபெயர்ப்பு நாவலான தம்மம் தந்தவன் க்கும் ஒரு விஷ்ணுபுரம் சார்பாக  விழா எடுத்து கவனப்படுத்தினார்.  அப்புறம் இன்னொரு விஷயம்  பள்ளி நாட்களில்தான் வாடா போடா என்று அழைக்கும் அளவு நெருக்கமான நண்பர்கள் கிடைப்பார்கள். அதன் பிறகு இருபத்தைந்து வயதிற்குப் பின்   அப்படி நண்பர்கள் கிடைப்பது அரிது. எனக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் அப்படி அணுக்கமான நண்பர்கள் கிடைத்தனர். அதற்கும் சேர்த்து மாஸ்டர் ஜெ. அவர்களுக்கு எனது நன்றி





யாவரும் பதிப்பகம் இந்த தொகுப்பை சிறப்பான முறையில்  வெளியிட்டது.  தொகுப்பு வெளியாகி இந்த ஒரு வருடத்தில்  இணையத்தில் பலரும் அதற்கு விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனந்தவிகடனிலும் மதிப்புரை வந்தது.  இன்று  அதற்கான விமர்சன கூட்டமும் ஒருங்கிணைத்துள்ளனர். யாவரும்-பதாகை  பதிப்பகத்தாருக்கும் (ஜீவகரிகாலன் & சுனில் கிருஷ்ணன் )அகரமுதல்வன் அவர்களுக்கும் எனது நன்றி.  



எனது சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதியாக  மட்டுமே இருந்திருக்கிறேன். விடிவு கதை மாத்திரம் சற்று ஆட்டோ ஃபிக்‌ஷன் வகை சார்ந்த்து. மற்ற கதைகள் அனைத்தும் சுயபுராணமோ அல்லது அனுபவத் தொகுப்போ அல்ல. ஆனால் அதன் உணர்வுகள் என்னுடையவை. அனைத்து கதாபாத்திரமாகவும் என்னுடைய குணநலன்கள் கலந்து வெளியாகியுள்ளன.  இந்தக் கதைகள் வழியாக நான் என்னை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் கூடியமட்டும் சிக்கலான வாக்கியங்கள் இல்லாமல் எழுதினேன். என்னுடைய சிக்கல்கள் என்றாலும் அதை தொகுத்துக்கொள்ள எனக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. வெண்முரசு எனக்கு அப்படி ஒன்றாக அமைந்தது. குறிப்பாக இமைக்கணம் நாவலின் கேள்விகள் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. ஆனாலும் ஒரு ஐயம் எனக்கு இருந்தது.  வெண்முரசை முழுதாக வாசித்த ஒருவர் எழுதும் கதை என்பது வாசகருக்குத் தெரியவாய்ப்பில்லை. நானும் கூடியமட்டும்  அதிகம் சுழிக்காமல் reading pleasure இருக்கும்படி எழுதக் கூடியவன். அதை conscious ஆக செய்வதில்லை. அப்படித்தான் எழுத வருகிறது.  ஆகவே இதன் சில பல கதைகள் சாதாரண கேள்விகளாக அல்லது பகடிக் கதைகளாக புரிந்துகொள்ளப்படுமோ என்கிற ஐயம். என் கதைகளை பிரசுமாவதற்குமுன் படித்த நண்பர்கள் தனசேகர் குருஜி ஜாஜா உள்ளிட்ட பலருடன் பேசிருந்தாலும் அந்த பதட்டம் இருந்தது. எழுத்தாளன் புனைவு எழுதியபிறகு அதை விட்டு கடந்து போகவேண்டும் என்றெல்லாம் சொன்னாலும் அது நிகழ்வது எல்லாம் இல்லை.. தொகுப்பிற்கு பின் வந்த கட்டுரைகளே அதை போக்கின.


அந்த வரிசையில் இன்று இந்த விமர்சன அமர்வும் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளித்தது







Muthukumar speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | முத்துக்குமார்

#TamilLiterature #ShrutiTVLiterature



முத்துகுமார் தொடர்ச்சியாக எழுதி வருபவர். தன் உரையில் ஆர்வலர் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் குறித்து கூறினார். ஏன் இவ்வளவு மனிதர்கள் வருகிறார்கள்? பன்றிக் குட்டிக்கு கூட ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். என் முதல் கதையான விடிவு வரும்போதும் இந்த கேள்வி வந்தது. ஒரு வாசகருக்கு அத்தனை பேரை நினைவு வைத்துக்கொள்ள நிர்பந்திக்கறது. அதை நானும் ஏற்றுக் கொண்டேன். அதை  அடுத்த கதையிலேயே  (பழனி) கவனமாக பார்த்துக் கொண்டேன். ஆர்வலர் கதையில் அது இருப்பது, பன்றிக் குட்டிகளுக்கு கூட பெயர் வைத்தது எல்லாம் கதையில் வரும் குழந்தை விளையாட்டுதான். பிற்கால கதைகளில் அத்தகைய குழப்பங்கள் அவருக்கு இல்லை என்று கூறினார். அவர் கருத்துகள் நண்பர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது கூட.



Sureshbabu speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | முத்துக்குமார்

#TamilLiterature #ShrutiTVLiterature )



சுரேஷ் நான் தொடர்ந்து உரையாடும் நணபன். இதன் சில கதைகளை வெளியான தருணத்தில் வாசித்திருந்தார். இன்று சுரேஷ் முன்வைத்த கருத்துகளும் அவர் என்னை வரையறுத்த விதமும் மனதிற்கு உவகை அளித்தன. அவரது மாம்பழ ஜூஸ் உதாரணம் ரசிக்கத் தக்கதாய் இருந்தது






Thendral Sivakumar speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | தென்றல் சிவக்குமார்


#TamilLiterature #ShrutiTVLiterature




கவிஞர்.தென்றல் அவர்களை முன்பு சந்தித்திருந்தாலும் முறையான அறிமுகம் இன்றுதான் நிகழ்ந்த்து. அவர் கதைகளில் உள்ள சிறு சித்தரிப்புகளை பற்றி பேசினார். சென்னை மக்களின் தெலுங்கு உச்சரிப்பு, ஆம்புலன்ஸ் பின்னால் போகும் பைக்காரர் போன்ற வர்ணனைகளை கூறினார். அவரது உரை ரசிக்கத் தக்கதாய் இருந்தது. ஆள்தலும் அளத்தலும்  ஸ்ரீஜி பூதம் போன்று கதைகளின் தலைப்பு  குறித்து கூறினார்.  கதைகளுக்கு பொருத்தமான தலைப்பு வைப்பவர் நாஞ்சில்நாடன் அவர்கள். மாமிச படைப்பு, தலைகீழ் விகிதங்கள் போன்று சுவாரசியமான வைத்தவர். நாவல்களுக்கும் சிறுகதைகளுக்கும்  பொருத்தமான தலைப்பு வைப்பதில் அவரது இடத்திற்கு அருகில் செல்ல முடிந்தால் கூட மகிழ்ச்சியே.



Akaramuthalvan speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | அகரமுதல்வன்


#TamilLiterature #ShrutiTVLiterature



அகரமுதல்வன் ரகளையாக பேசினார்.  அவர் பேசுகையில் என்னுடைய பள்ளி (school of thought) பற்றி புரிந்து கொண்டால் என் கதைகளை புரிந்து கொள்ள முடியும் என்றார். அதை நான் மிகவும் கவனத்துடனே கையாளுகிறேன். அதை நான் எப்படி கையாள்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆகவே நடையில் அல்லது  வார்த்தை அமைப்புகளில் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் :-)) ஆனால் எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும் :-)






அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்


காளிப்ரஸாத் ஏற்புரை "ஆள்தலும் அளத்தலும்" விமர்சனக் கூட்டம் | Kaliprasadh speech


#TamilLiterature #ShrutiTVLiterature


மேலும் புகைப்படங்கள் 


https://www.facebook.com/100008908201177/posts/2703315299975384/?app=fbl


நன்றி கபிலன் ஸ்ருதி டிவி





1 comment:

barnasalai said...

Wish you all the very best