Monday, January 19, 2009

புத்தக கண்காட்சியில் சில மணி நேரங்கள்..


சென்ற ஞாயிறு புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதற்குமுன் அதன் தொடக்க நாளின் கடைசி கால் மணி நேரத்திற்கு முன் சென்று கடை மூடப்போன உயிர்மையிடம் கெஞ்சி சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு இரணடை காசு கொடுத்து வான்ங்கினேன்...( பணக்கஷ்டம்பா...நேரமாகிவிட்டதால் கிரெடிட கார்டை அப்போ ஏற்றுக்கொள்ளவில்லை..) வீட்டில் உள்ளவர்கள் சுஜாதா ரசிகர்கள் என்பதால் ஊருக்கு போகும் முன் அவசர அவசரமாக வாங்க நேர்ந்தது.
மீண்டும் முந்தாநாள் சென்றபோது மாலை 4 மணி. முகப்பில் தமிழக முற்போக்கு எழுதாளர்கள் சங்கம் சார்பாக குறுபடங்கள் திரையிடல் நடைபெற்றது. கோபாலய்யங்காரின் மணைவி ( புதுமைப்பித்தன் கதை...), அரவாணிகள் பற்றிய படம், மிஸ்டர் பர்பெக்ட், என் பெயர் பாலாறு ஆகிய படங்களை பார்த்தேன். சென்ற ஆண்டு கலைஞரின் புகைப்படங்கள் மட்டும் அங்கு இருந்தன. இந்த ஆண்டு தமுஎச விற்கு ஒதுக்கியது பாராட்டத்தக்கது. 
வெளிப்புற மேடையில் மணிமேகலை பிரசுரம் சார்பாக 31 புத்தகங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தனர். 31 புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் லேனா. நல்ல செய்தி. மேடையில் அறிந்த முகங்களென்றால் லேனாவைத்தவிர்த்து கவிஞர்.தமிழச்சி ( இந்த பேர்தான் பிடிக்கலை...மற்றபடி இவர் கவிதைகள் பிடிக்கும் என்று சாரு சொன்னார் ஒரு மேடையில்), விஜிபி சந்தோஷம் ( இவரும் 31-ல் ஒருவர் என பிறகு தெரிந்தது.), இயக்குநர் சேரன். தவிர நடிகை சினேகா மேடையில் பேசிக்கொண்டுந்தார். ( நன்றாகவே தமிழ் பேசுகிறார்.நடுவில் ஆங்கிலம் அவ்வ்வளவாக இல்லை..) . மற்ற விருந்தினரெல்லாம் பேசி தமிழச்சியும் சேரனும் பேச ஆரம்பிக்க ஒரு மணிநேரமாகும் என புரிந்ததால்...புத்தக கண்காட்சிக்கு உள்ளே சென்றேன். இந்தமுறை எனது இலக்கு யாமம்( எஸ்.ராமக்ருஷ்னன்)மற்றும் 0டிகிரி ( சாரு நிவேதிதா) கணையாழி கடைசி பக்கங்கள் ( சுஜாதா---ரெக்கமெண்டெட் பை சாரு நிவேதிதா). 
மீண்டும் உயிர்மைக்கு சென்றேன்..அங்கு மனுஷ்யபுத்திரன் இருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக்கொண்டபின் யாமம்,கணையாழியை கண்டெடுத்தேன்...ஸீரோடிகிரி கிடைக்கவில்லை...ஒருவேளை வேறு பதிப்பகமோ என நினைத்த போது சாரு நிவேதிதா அங்கு வந்தார். அவரை கண்டவுடன் ஒரு படபடப்பு...அவர் கதைகளை படித்ததாலோ அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டதாலோ இருக்கலாம். தயக்கத்துடன் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
சார்...நான் உங்க நீண்டநாள் வாசகன்...( கடந்த ஒரு வருஷம்தான்...)
அப்படியா சந்தோஷம்...என்ன புக் வாங்கறீங்க...
”ஸீரோ டிகிரி ...”
அவர் கிட்டத்தட்ட முறைப்பது போல தொன்றியது. ஸீரோ டிகிரி படிக்காமல் எப்படி வாச்கனானேன் என் யோசித்திருப்பார் போல...
அப்புறம் அவ்ரே அங்கிருந்த் இரண்டே இரண்டு ஸீரோ டிகிரியை காண்பித்து ஒன்றை எடுத்துக்கொடுத்தார். 
அவர் இணையத்ளத்தை படிப்பதையும்., மற்ற புத்தகங்களை படித்ததையும் சொன்னேன். ராசலீலா படித்துவிட்டு அதன்பின் ஸீரோடிகிரி படிக்க சொல்லி என் நண்பர்கள் சொன்னதை அவரிடம் சொன்னபோது சற்றே ஹெஹ்ஹே என சிரித்தார்.
ராஸலீலா ஓசியில் வாங்கி படித்ததை சொல்லாமல் அவரிடம் ஸிரோடிகிரியில் ஒரு ஆட்டொகிராப் (தமிழனின் பண்பாடுங்க)வாங்கிக்கொண்டு மற்ற ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன். சும்மா சுற்றிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது விஜிபி சந்தோஷம் பேசிக்கொண்டிருந்தார். அருகிலிருப்பவரிடம் விசாரித்தபோது தமிழச்சி பேசி முடித்துவிட்டாரென்றார். ( ஆஹா...நல்ல ஸ்பீச் மிஸ் ஆயிடுச்சே என வருத்தம்)
விஜிபி சந்தோஷம் தான் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை வாசித்தார். 
( அதாவது உரைநடையின் ஒரு வரியை இரண்டுதடவை வாசித்தார்). அதற்குப்பின் நன்றியுரையும் முடிந்து கடைசியில் ஏகப்பட்ட பிலடப்பில் சேரன் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசும்போது தனது பள்ளி நாட்களில் இலக்கியம் படிக்க முடியாமல் போனதற்கு இந்த கல்வி முறைதான் காரணம் என சாடினார். அவரது திரைப்படங்களைப்போலவே அவரது உரையும் உணர்ச்சிமயமாக இருந்தது. அவர் ஒரு நல்ல கலைஞன் நல்ல இயக்குநர் மற்றும் பேச்சாளர் என புரிந்தது.

அதன் பின் மீண்டும் தமுஎச அரங்கிற்கு சென்றேன். அங்கு தமுஎச செயலாளர் உரையாற்றிக்கொண்டிருந்தார் அதுவும் நன்றியுரைதான் என புரிந்து அங்கிருந்து கிளம்பினேன். குறும்பட திரையிடலை தவர விட்டது வருத்தமளித்தது. தினமும் வந்திருக்கலாம் என தோன்றியது.

Friday, January 16, 2009

பத்திரிக்கைகள் படித்து.... மனசு கெட்டுப்போய்...

பல நாட்களுக்குப்பிறகு நேற்று குமுதம் வெப்சைட் பார்த்தேன். ஓ பக்கங்களுக்காகவும் தீராநதிக்காகவுமே குமுதம் வலைதளம் சென்று வந்திருந்தேன்.  அதன் தனிச்சிறப்பான  ஒரு பக்க கதைகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேற்று அது எதுவுமே படிக்கவில்லை. இரு நடிகனின் கதை மட்டுமே படித்தேன். கல்லூரி நாட்களில் விடுதியில் படித்த சரோஜாதேவி மற்றும் வாலிப விருந்து கதைகளை மீண்டும் படிப்பது போல ஒரு எண்ணம். விற்பனையை அதிகரிக்க இது மாதிரியான காரியங்களில் இறங்குகிறார்கள். அதை படித்ததும் ஆரம்பத்தில் ஒரு நடிகையை பற்றி கற்பனை வந்தாலும் பிறகு வருத்தமே மிஞ்சியது...இந்த இழவிற்கு பதிலாக அறிந்தும் அறியாமலுமே ஞாநியை எழுத வைத்தால் நன்றாக இருக்கும்

பாவம் நம் நடிகர்கள்...காவிரியானாலும் நெய்வேலியானாலும் ஈழமானாலும் முதலில் அவர்கள் தலையை உருட்டுவதே பத்திரிக்கைகள் வேலையாகிவிட்டது. இப்பொழுது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் போட்டு ( கற்பனை என்றாலும்) விற்பனையாக போகிறது. என்னத்தான் நடிகனின் கதை என்கிற தலைப்பு  இருந்தாலும் அது நடிகைகளை பற்றி மட்டுமே படம் வரைந்து பாகங்களை குறிக்கப்போகிறது என்பது முதல் பத்தியை பார்த்தபோதே புரிந்தது. பின்னே நடிகனின் திறந்த மேனியை பார்க்கவா தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது??

அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார். 

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....

Thursday, January 15, 2009

எனது முதல் பதிவு

முதல் பதிவு இன்றைக்கு போட்டுள்ளேன்...
ஒருவழியாக ப்ளாக் ஆரம்பித்துவிட்ட மனநிறைவோடு.