Saturday, April 25, 2009

ஊர்க்காவலன் முதல்


நாங்கள் எங்கள் ஊரில் பச்சகுதிரை, ஓடிப்பிடிப்பது, அலேஸ்பாய் போன்ற புராதன விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடினாலும் காலத்திற்கேற்ப  அதை ரீர்மிக்ஸ் செய்து கொள்வோம்.  அது அப்பொழுது வந்த திரைப்படங்களை சார்ந்திருக்கும். திருடன் போலீஸில் திருடர்கள் கார் ஏறி தப்பிக்கும் போது காரில் ஒரு கயிற்றைகட்டி அதன் மறு முனையை தன் காலில் கட்டிக்கொண்டு காரை நிறுத்துவது ஊர்க்காவலன் ஸ்டைல். இதி கார் கயிறு போன்றவை கற்பனையாக நினைத்துக்கொள்பவை என்பதை அறிக. இது போல  தரையில் கால் படாமல் சுத்தி சுத்தி அடிக்கும் ”மனிதன்” விளையாட்டுக்களும் ஈ அடிக்கும் ”வேலைகாரன்” விளையாட்டுக்களும் உண்டு. இன்னும் பின்னோக்கி யோசித்தால்  எதுவும் நினைவில் இல்லை. நான் நினைவு தெரிந்த காலம் முதல் ரஜினி ரசிகன்.

நான் மட்டும்தான் என்றில்லை. எங்க செட்டில் எல்லோருமே அப்படித்தான். சில சீனியர் நண்பர்கள் ( 10 வயசு வித்தியாசம்) ஓரிருவர்  கமல் ரசிகராக இருந்தாலும் ரஜினி படம் வந்தால் முதல்நாள் முதல் ஷோ தவறாது. ( படங்கள் பெரிய நகரங்களில் ரிலீஸாகி அங்கிருந்து தூக்கப்பட்டபின் தான் மன்னார்குடியில் ரிலீஸ் ஆகும். சுற்றியிருக்கும் திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரில் எல்லாம் முதலில் ரிலீசாகி விடும். அதன் பின் மன்னார்குடிக்கு வரும்...நான் சொலவது இந்த இரண்டாம் கட்ட ரிலீஸின் முதல் நாள் முதல் ஷோ என்பது கவனத்திற்கு...) . அந்த விதத்தில் தலைவர் படங்களில் நான் பார்த்த முதல்நாள் முதல் ஷோவில் ( இனி சுருக்கமாக முமு) முதலானது முரளியுடன் முதலில் பார்த்த ( யப்பாடி எத்தனை மு) மாப்பிள்ளை படம்.  முரளி என் அண்ணன் என்பதும் உங்கள் கவனத்திற்கு.

முரளிக்கு ஏற்கனவே சென்னை ஸ்ரீநிவாஸா தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய அனுபவம் கைகொடுக்க கவுண்டரில் முட்டி மோதி கடைசியாக இருந்த இரண்டு பால்கனி டிக்கெட்டுக்களை வாங்கி விட்டான். அந்த படத்தில் தலைவர் அறிமுகம் அசத்தாலாகவே இருந்தது.
கல்யாண வீiட்டில் மோட்டர் பைக்கோடு வந்து கல்யாண பெண்ணை கடத்திக்கொண்டு போவார். 
ஒரு சண்டை காட்சியில் சிரஞ்சீவியும் வந்தது எங்களுக்கு திருப்தியாக இருந்தது. அதன் பின் நான் ஆறாவது முழுப்பரிட்சையிலும் அவன் ஏழாவது முழுப்பரிட்சையிலும் பிஸியாகி விட்டோம். பரிட்சை முடிந்த நேரம்  பணக்காரன் ரிலீஸ்.

பணக்காரன் படத்திற்கு டிடியில் விளம்பரமும் வந்தது. காரோடு  ஒரு லாரிக்குள் ஏறிவிடுவார் தலைவர். காரில் வில்லன் பாம் வைத்திருப்பார். காரில்  தலைவரின் அம்மா வேறு இருப்பார். அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் காரால் லாரியைஒ உடைத்துக்கொண்டு அவர் வெளியே வந்துவிட பின்னர் பாமும்  வெடிக்க ...விளம்பரம் முடிந்து விடும். எங்களுக்கு விளையாட்டு நேரத்தில் கூட  அந்த படததை பற்றிதான் பேச்சு ஓடியது. நம்ம ஊருக்கு வரும்போது முமு என நானும் முரளியும் பேசி வைத்துக்கோண்டோம். அப்படிபட்ட ஒரு நன்நாளில் நெத்திஅடி படம் பார்க்க லக்‌ஷ்மி  போன என் பிரெண்டு ஒருத்தன் அங்கே இண்டெர்வெல்லில் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் பாட்டு போட்டதாக சொன்னான். எங்க ஊர் தியேeட்டரில் அடுத்து போடப்போகும் படத்தின் பாடலை ஸ்பீக்கரில் போடும் பழக்கம் இருந்து வந்தது. மீண்டும் முமு மீண்டும் முரளியும் நானும் சென்று பார்த்து வந்தோம். அதில் ஊட்டி எஸ்டேட்டில்  இருக்கும் வெளிமாநில வில்லன்களை அந்தந்த மாநில பாஷை பேசி தலைவர் பெண்டு எடுக்கும் சீனை நாங்கள் எல்லோரும் பல மாதங்களுக்கு  இமிடேட் செய்து வந்தோம். தலைவருக்காக இளைய்ராஜா குரல் கொடுத்த உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடலினை என் நண்பன் பாட்டுப்போட்டியில் பாடி எங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடயே ஆறுதல் பரிசை வாங்கிகொண்டான். 

அடுத்து ராஜாதிராஜா படத்தில் கோழையாக் இருந்து வீiரனாக மாறுவார்..மீனம்மா...மீனம்மா பாடலில் கோட் சூட் போoட்டு கையை மடக்கி விட்டுக்கொண்டு வருவார். யே ஜமாலக்கடி கிரி க்ரி என்று ராதாரவி கையில் பாம்பை கொண்டு வருவார்...கத்தியை அந்தரத்தில் சுழல விடுவார்..ஆக அந்த படமும் எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது...( எங்கள் ஊரில் முப்பது நாள் ஓடுவதே மிக அதிகம்)

அதற்கிடையே கொடி பறக்குது தர்மதுரை போன்ற நேரடி படங்களும்  நாட்டுக்கொரு நல்லவன் வீiட்டுக்கொரு நல்லவன் என்று இந்தி டப்பிங் படங்கள் வரிசையாக வர அதையும் பார்த்து ரசித்தோம். 

நான் எட்டாவது படித்த காலத்தில் வந்த  தீபாவளியன்று தளபதி ரிலீஸ்.  டிடியில் மங்கள இசை ஜெயேந்திரர் அருளுரை ஆகியவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டு புதுப்பட பாடலுக்காக வெயிட்டிங்கில் இருந்தோம். கொஞ்சநேரம் காக்க வைத்து பின் ராக்கம்மா கையதட்டு பாடல் ஒளிபரப்பானது. கைதட்டி மிக்ஸரையெல்லாம் தரையில் கொட்டி அதகளமாகி விட்டது. இதில் கவனிக்க வேeண்டிய ஒரு முக்கிய விஷயம் எங்கள் தெருவில் இரண்டு பேர் வீiட்டில்தான் அப்பொழுது டிவி இருந்தது. அவர்களில் ஒருவர்தான் படம்பார்க்க உள்ளே விடுவார். ஒட்டுமொத்த பசங்களும் அன்று அவர் வீiட்டிதான் இருந்தோம். பிறகு வெடி வெடிக்க கிளம்பிவிட்டோம். அந்த தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கூட ரிலீஸான  கமலின் குணா திரைப்படம் அபாரமாக மண்ணைக்கவ்வியது. குஷ்பூ இருந்ததால் பிரம்மா தப்பித்தாலும் தலைவர் முன்னால் நிற்க முடியவில்லை. அப்பொழுது வந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளிலெல்லாம் தலைவர் குளத்து படிக்கட்டில் உட்கார்ந்து திரும்பிபார்க்கும் ஸ்டில்கள்தான். பொங்கலன்று மன்னன் ரிலீஸ்...
அந்த படததை கும்பகோணத்தில் பார்த்தோம். சின்னக்கவுண்டர் வேறு வெற்றியடைந்ததால் பலமான் போட்டி.

இப்படி சாத்வீமாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் அண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது நாங்கள் செட் சேர்ந்துவிட்டோம்...கிட்டத்தட்ட 10 பேர் ஒன்றாக சென்று அண்னாமலை படம் பார்த்தோoம்...அதில்தான் முதன் முதலில் ரஜினி பேர் போடுவதற்கு முன் சூப்பர்ஸ்டார் என்று லோகோ வந்தது. எங்களுக்கு ஒரே உற்சாகம். முன் சீiட்டில் இருந்தவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள்... வந்தேண்டா பால் காரன் பாடு வந்த்போது  ரஜினி இண்ட்ரோவில் சூடம் காட்டி தேங்காய் உடைத்தார்கள்....இத்தனைக்கும் முக்கிய காரணம் அண்ணாமலை படம் எங்கள் ஊரில் முதல்நாளே  ரிலீஸானதுதான். 

அதன் பின் வந்த பாண்டியன், எஜமான் உழைப்பாளி, வீiரா படங்கள்  வந்த்போது முரளி ஊரில் இல்லாததாலும் 10 வகுப்பு தேeர்விலும் ஹிந்தி ப்ரவீiன் தேர்வுகளில் பிஸியாகி விட்டதாலும்
முமு மிஸ்ஸாகிவிட்டது. 

பிறகு நாகப்பட்டிணத்தில் டிப்ளமோ சேர்ந்த போது பாட்ஷா வெளியானது. அந்த படததை மன்னார்குடியில்தான் பார்த்தோம்...இண்டெர்வெல் வரை சண்டையே வரல.... ஆனால் படத்தில் செம பில்டப்.  இண்டெர்வெல் வருவதற்கு முன்னாடி ஒரு ஃபைட்டும் அதைத்தொடர்ந்து  “நான் ஒருதடவை சொன்னா...” பஞ்ச் டயலாக்கும் தேவாவின் பாட்சா...பாட்சா..ன்னு eகிரவுண்ட் இசையும் பட்டைய கிளப்ப...பல இடங்களில் டயலாக்கே கேட்க முடியல...அந்தளவிற்கு கைத்தட்டல்...விசில்ன்னு அதகளம்தான்...அதுல எங்கிட்டே இருக்கிற கூடாம் நான் சேர்த்த் கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த்ந் கூட்டம்-னு தலைவர் சொல்லும்போது  எங்க ஊர் மன்ற செயலாளர் சட்டைய கழட்டி ஸ்கிறின் முன்னால நின்னு தலைவான்னு ஒரு ஆட்டம் போட்டாரு.

எங்க பார்த்தாலும் பாட்சா தான் பேச்சே...தலைவர் அரசியலுக்கு வரப்போறாருன்னு வேeற பத்திரிக்கை செய்தி. இந்த மாதிரி இருக்கும்போது முரளியை பார்க்க திருச்சி போனபோது ரம்பா ஊர்வசி தியேட்டரில் முத்து படம் பார்த்தோம்...முதன் முதலில் நாங்கள் சேர் மீது ஏறி நின்று ஆடியது அப்பொழுதுதான்.  எங்கள் முன்சீட்டில் இருப்பவர்களும் நின்று கொண்டிருந்ததும் அதற்கு காரணம்.
அதில் அப்பா ரஜினி சொத்தை விட்டு விட்டு போகும் போது வர்ம் விடுகதையா பாடலில் டபுள் மீநிங் இருந்தது. அவர் அரசியலுக்கு வர்வாருன்னு சொன்னாங்க... அப்படி அவர் அரசியலுக்கு வந்துட்டு சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திட்டா அப்புறம் யார் படத்தையும் ”முமு” பார்ப்பதில்லை என்று நாங்கள் உறுதி எடுத்துக்கொண்டோம். அப்புறம் தலைவர் அரசியலுக்கு வராப்போறதில்லை.. அடுத்த படம் அருணாச்சலம்-ன்னு அறிவிச்சாரு.

அருணாச்சாலம் ரிலீசப்போ எனக்கு டிப்ல்ளமோ ஃபைனல் இயர் computer application  பிராக்டிகல். எக்ஸ்டெர்னலா வந்தவர் என்னிடம் கேள்வி கேட்டுக்கிட்டிருந்தப்போ பசங்கல்லாம் எனக்காக வராண்டாவில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கிட்டிருந்தாங்க...நியும் அவங்களொட அருணாச்சலம் படம் பார்க்க போறியான்னும் கேட்டாரு...எவனோ ஒளறிட்டான்னு  புரிஞ்சது. 
ஹி..ஹி..ன்னு சிரிச்சுட்டு வெளியே வந்து பஸ்ஸை பிடிச்சு தியேeட்டருக்கு போய் படத்தை பார்த்தோம்...படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை...பாட்டும் மொக்கையாக இருந்தது...இன்னும் எக்ஸாம் இருந்ததால எங்களால ரொம்ப ஆட்டமும் போட முடியல...மதத ரசிகர்கள் எல்லோரும் எப்பவும்போல கலக்கிக்கிட்டு இருந்தாங்க. அனாலும் படம் நூறுநாள் ஓடியது. இது தலைவர்க்கு மட்டுe சாத்தியம்-னு தினமனிக்கதிரில் போட்டிருந்தாங்க. 

அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு பெங்களுருக்கு ஒரு இண்டெர்வியூ-க்கு போயிட்டு வந்தேன். இண்டெர்வியூ செம மொக்கை.   அப்போதான் படையப்பா ரிலீஸாச்சு. சரீனு தியேட்டருக்கு போயிட்டேன்...சென்னை உதயம் தியேட்டர்...இது அருணாச்சலம் மாதிரி இல்லை...நல்ல வேகம்...ரம்யா கிருஷனன் தமிழ் ஃபீப்ல்டுக்கு ரீஎண்ட்ரி ஆனாங்க. தலைவர் கூuட நடிச்ச நடிகைங்க எல்லோருமேe நல்லா பிக்கப் ஆவாங்க. அதுதான் தலைவரின் ராசி...(ஆனால் கமலோடு நடிச்சா ஃபீல்ட் அவுட்டுதான்). இந்த படமும் பட்டைய கிளப்பிடுச்சி..க்ளைமாக்ஸும் திருப்தியா இருந்தது. கேe.எஸ். ரவிகுமார் பத்தியும் கமர்ஷியல் படத்துக்கான திரைக்கதைன்னா என்னங்கிறதையும் இந்த படத்த பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

பாபா............ஆந்திராவில் இருந்து இந்த படம் பார்க்க நான் சென்னைக்கு வந்தேன்...ஒரு நாள் லீவில் வந்து படம் பார்க்க முடியலைன்னா என்ன பன்றதுன்னு ரெண்டு பசங்க கிட்டே சொல்லி படத்துக்கு ரெண்டு தியேட்டரிலே ரிசர்வ் செய்ய சொல்லியிருந்தேன். ரெண்டுமே புக்காயிடுச்சி... முதலில் ரோகினி தியேட்டரில் பார்த்தோம்... படம் இண்ட்ரொடெக்‌ஷன் எல்லாம் நன்றாகவேe இருந்தது...பாபா முத்திரையோட  தலைவர் ஸ்டைலா நிப்பார்...அப்புறம் ஸ்கிரீனை பார்த்து புர்ர்ர்ர்ர்...ன்னாரு ( டிப்பு டிப்பு பாடு ஸ்டார்ட்டிங்). அப்பவே கொஞ்சம் ஷாக்காயிட்டோம்...அதுக்கப்புறம் மந்திரியை பார்க்க பைக்க எடுத்திக்கிட்டு சர்..ன்னு போறதுன்னு ஏகப்பட்ட சொதப்பல்ஸ்...அவர் உடம்புல சக்தி வருவதும்...பட்டத்தை கீழே இறக்குறதும் பார்த்து கொஞ்சம் மெரசலாகி வெளியே வந்தோம்.  இருந்தாலும் ரெண்டாவதா புக்கான டிக்கெட்டையும் வச்சு அன்னைக்கே இன்னொருவாட்டி பார்த்தேeன்...ரசிகருங்க எல்லாம் படம் ஆரம்பிக்குபோது ரொம்ப பரபரப்பா இருந்தாங்க அப்புறம் டல்லாயிட்டங்க இத நேராவே பார்க்க முடிஞ்சது...

அப்புறம் தேர்தலில் பாமகவுக்கு எதிரா பேசினாரு தலைவர்...ஆனால் பாமக ஜெயித்துவிட்டது. ஜக்குபாய் படம் ட்ராப் ஆனது. தமிழ் ஃபீல்டில் விக்ரம்தான் நம்பர் ஒன் -னு குமுதத்திலேe கவர்ஸ்டோரி வேற போட்டாங்க...இந்த நேரத்தில் தான் சந்திரமுகி படம் ரிலீiஸ் பண்ணினாரு..விஜயோட சச்சின் படமும் வந்தது. ” ரஜினிக்கு நான் ( கவனிக்க...ரஜினிக்கு) போட்டி இல்லை...ஒரு திருநாள்ன்னா எல்லார் படமும்தான் வரும் ...எது நல்ல படம் -னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் விகடனில் பேட்டி கொடுத்தார். நான் யானை இல்லை குதிரை; எப்படி இருக்கணுங்கறதைவிட எப்படி இருக்கக்கூuடாதுங்கறது முக்கியமுன்னு ஆடியோ ரிலீஸில் தலைவர் பேசினார்..எனக்கு மிகவும் உறசாகமானது.  அந்த நேரம் பார்த்து முரளியும் மதுரையில் இருந்து ஒரு வேeலை விஷயமாக சென்னை வந்திருந்தான். அருணாச்சலம் பாபா படம் தவிர மத்ததெல்லாம் அவனோட சேர்ந்துதான் பார்த்திருந்தேன்...அந்தவகையில்  எங்கள் வெற்றிக்கூuட்டணி மீiண்டும் இணைவதால் படம் வெற்றி...அதில் கடைசியில்  வேட்டையன்  லகலகலக மிரட்டிடுச்சி.. அதைவிட ஜோதிகா லகலக சொல்லும் சீன் தியேட்டரேe அதிர்ந்தது. எங்கு பார்த்தாலும்  சந்திரமுகிதான். லோக்கல் கேபிளில், பஸ்ஸில் என்று இதுவரை  20தடைவை பார்த்திருப்பேன்...அப்பொழுது ரிலீசான கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃப்ளாப்...ஆனா மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று வரை கமலின் சிறந்த 5 படங்களில் ஒன்றாக நான் அதை நினைக்கிறேன். சச்சினும் ஃப்ளாப்...” நான் அப்பவே சொன்னேன்...சூuப்பர் ஸ்டார் ( கவனிக்க இப்போ..சூப்பர் ஸ்டார் ) கூட என் படத்தை வெளியிடாதீங்கன்னு...புரொடியூசர்தான் கேக்கலை” ந்னு அப்படியே ஒரு பல்டி பேட்டி கொடுத்தார் விஜய்...

ஷங்கர் டைரக்‌ஷனில் சிவாஜி படம் அறிவித்தார் தலைவர். சிவாஜி படம் ரிலீiஸின் போது சத்யம் தியேட்டரில் ஈவ்னிங் ஷோ முன்பதிவு செய்துவிட்டேeன். ஆனால் கலை எட்டு மணிக்கே என் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான்...” டே தியேட்டரில் இருக்கேண்டா...சுத்தி பத்தாயிரம் பேர் நிக்கிறப்போ போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜீiப்பில் வந்து தலைவர் இறங்குறார்டா...” அதுக்கப்புறம் வேலையேe ஓடலை..ஒரு வழியா சாயங்காலம்  தியேட்டரில் உட்கார்ந்தா......கைதட்ட மாட்டாங்களாம்...விசிலடிக்க மாட்டாங்களாம்...கேட்டா தியேட்டர் கட்டுப்பாடாம்...அதையும் மீiறி நாங்க ஒரு நாளு பேர் கைத்தட்டலும் விசிலுமா ரகளை பண்ணிட்டுத்தான் வந்தோம். ஆனால் இனிமே தலைவர் படத்துக்கு சத்யம்ல மட்டும் ”முமு”  போகக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்.

படத்தில் இவர் கெஸ்ட் ரோல் என்றாலும்...அடுத்து குசேலன்  அந்தளவிர்கு பரபரப்பாகவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். 

இப்பொழுது தமிழ் படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை...சினிமா பற்றிய அறிவு கொஞ்சம் அதிகமாகிவிட்டுக்கிறது.  கமர்ஷியல் படங்கள் மீதான ஈர்ப்பும் குறைந்து விட்டது . தலைவர் படம் மட்டும் இதில் விதிவிலக்கு...

ரோபோ ரிலீஸ் தேதி அறிவித்தவுடம் எனக்கும் முரளிக்கும் ”முமு”  டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும்...


Wednesday, April 15, 2009

ஹிந்து மதத்தின் எதிரிகள்

ஹிந்துக்களின் எதிரிகள் என்கிற தலைப்பில் ஆர்க்குட் தமிழ் குழுமத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..அதில் நான் பதிவு செய்தவைகளை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன்.

ஹிந்து மதத்தின் எதிரிகளில் முக்கியமானவர்கள் பெரும்பன்மை இந்துக்களை தங்கள் மதம் மீதே வெறுப்பு கொள்ளச்செய்தவர்கள்...அவர்கள் அந்தகாலத்தில் கல்விமானாக இருந்தவர்கள்... வேதம் என்கிற ஒரு அறிவியலை தனக்குள் மட்டும் வைத்துக்கொண்டு யாருக்கும் போதிக்காமல் இப்பொழுது அது அழியும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள்... வான சாஸ்திரம், கணித சாஸ்திரம் போன்றவை வேதத்திற்குபின் வந்த ஆராய்ச்சி நூலகள்...சமிஸ்கிருதத்தில் விமான சாஸ்திரம் என்று ஒரு புத்தகம் உண்டு...அதில் ஒரு உலோகத்தை பறக்க வைப்பது எப்படி என்று விளக்கமாக உள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு பலகாலம் முன்பு எழுதப்பட்டது....இன்றைக்கு அது எம்.ஏ படிக்கும் சமிஸ்கிருத மாணவர்களின் பாடமாக உள்ளது...ஆனால் அதில் என்ன பயன்? ..மக்கள் நேரடியாக ஏரோநாட்டிகல் எஞினியெரிங் படித்துக்கொள்கிறார்கள்.. தீண்டாமையை புகுத்தியவர்கள்...அதையே இன்றைக்கு எதிரிகளாக சொல்லப்படும் வேறு மதநிறுவனங்களும் மதசார்பற்ற அரசியல்வாதிகளும் போலி நாத்திகர்களும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. சக மனிதன்ன் மீது அன்பு செலுத்தாதவர்களும் தனக்கு தெரிந்த கல்வியை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாத சுயநலவாதிகளும்தான் முக்கிய காரணம்..

இன்னும் சொல்லலாம்... கோவிலுக்குள் அதுவும் வெளிச்சம் புகாத கருவறைக்குள் இருக்கும் கடவுளின் உருவத்தை காட்ட தீபம் ஏற்றினார்கள். ஆனால் அந்த தீபத்தை தட்டில் ஏந்தி வந்து தட்சணை கேட்பதென்பது ஒருவித சுயநலம்.அந்த தீபத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஏமாற்று வேலை. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அர்ச்சகர்களின் பேராசை என்று சொல்வார்கள். ஆனால் இன்னொரு காரணம் ஏழ்மை நிலையும்தான். இன்றும் நீங்கள் தஞ்சை, கும்பகோணம், காரைக்க்கால், நாகப்பட்டிணம் வேதாரண்யம் பகுதிகளில் ( குறிப்பாக சோழநாடு) சுற்றிவந்தால் பல கோயில்களை காணலாம். பெரும்பாலான மக்களுக்கு தஞ்சை பெரிய கோயிலும் கும்பகோணமென்றால் திருநாகேஸ்வரமும் ஒப்பியப்பன் கோயிலும் தான் தெரியும். ஆனால் கிட்டத்தட்ட 100 -க்கும் மேற்பட்ட கோயிலகள் வரை அந்த் பகுதிகளில் இருக்கின்றன. எல்லா கோயிலகளும் மிக உயரமான கோபுரங்களை உடையதாகவும், மிகப்பெரிய பரப்பளவில் உள்ளதாகவும் இருக்கின்றன. சோழ , நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை. சிற்பக்க்லைக்கு சான்றாக விளங்குபவை. பரம்பரையாக வரும் அர்ச்சகர்களெ அங்கு பூஜை செய்து வருகிறார்கள். கோவிலுக்கென்று இருக்கும் நிலங்கள் இப்பொழுது பறிபோய்விட்டன. இந்த நிலையில் அர்ச்சகர்கள் அந்த கோயில்களை தினமும் சுத்தம் செய்து பூமாலை வாங்கி போடக்கூட வசதியில்லாதவர்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கேற்றக்கூட காசு இல்லை. இந்நிலை தங்கள் குழந்தைகளுக்கும் வந்துவிடக்கூடாதென்று சென்ற தலைமுறையிலேயே பல அர்ச்சகர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட துவங்கி விட்டார்கள். இந்த தலைமுறையில் எல்லோரும் வேறு வேலைக்கு சென்றுவிட்டார்கள். கோயில் பக்கம் எட்ட்டிப்பார்ப்பதில்லை...ஐயருக்கே அக்கறைஇல்லை என மற்றவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள். இப்பொழுது அங்கிருக்கும் கோயில்கள் எல்லாம் சுத்தம் செய்ய ஆளின்றி சிதிலமடைந்து இருக்கின்றன . இன்னும் சில வருடங்களில் அதனருகே செல்லும் யாராவது தும்மினால் அந்த அதிர்சியிலேயே விழுந்துவிடும். இதற்கெல்லாம் காரணம் வேற்று மத சக்திகளோ நாத்திகவாதிகளோ இல்லை.ஹிந்துக்கள்தான். மீண்டும் என் முதல் பத்திக்கே வருகிறேன்... இதற்கும் நான் முதல் பதிவிற்கும் ஒரு நூலிழை தொடர்பு உண்டு. கோயில்கள் நன்றாக இருந்த காலத்தில் கிடைத்த தான தர்மங்ங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு கல்வியையும் பிற சாதியினருக்கு கற்றுக்கொடுக்காமல் எல்லா சுகங்களயும் அனுபவித்தவர்கள் இனி கஷ்டம் என்றபோது என்ன சொல்லி பிறரிடம் கேட்பது?

ராமானுஜரும் பாரதியாரும் தாங்கள் வாழ்ந்த கால்த்திலேயே இதுபற்றி யோசித்திருக்கிறார்கள். ராமானுஜரின் வழியை அவரின் சீடர்களே பின்பற்றவில்லை. பாரதியின் நிலை நமக்கு தெரிந்ததே. ராமானுஜரை எதிர்த்தவர்கள் சைவ சித்தாந்தவாதிகள், பாரதியை எதிர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது வெளியே தெரிபவை. ஆனால் பிராமணர்கள் மத்தியிலேயே இவர்கள் இருவருக்கும் எதிர்ப்புகள் இருந்தன. இதற்கு காரணம் ஒருவித மிதப்பு அல்லது தற்பெருமையிலேயே சிக்கிக்கொண்டவர்களாக பிராமணர்கள் அன்று இருந்திருக்கிறார்கள். இன்று சிதம்பரம் வரை அதேநிலைதான். வேதங்கள் பயின்றால் நினைவாற்றலை பெருக்க்கிக்கொள்ளலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து ஒப்பித்தல் / எழுதுதல் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் எளிதாக இருக்கும். இது வெறும் இந்து மத வேதங்கள் மட்டும்தான் என்றில்லை. அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். தியானம்அல்லது சந்தியாவந்தனம், பிரேயர், நமாஸ் எல்லாமே மனதையும் உடலையும் பலமானதாக்குபவை. மூடநம்பிக்கைகள் அல்ல...அறிவியல்பூர்வமானவை..இந்தியாவில் இருக்கும் மற்ற மதத்தினரில் அனைவருக்கும் கட்டாயமாக கிடைக்கும் இந்த ஆன்மீக அனுபவங்கள் இந்து மதத்தில் மட்டும் பலருக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம்..??

இன்று கூட கோயிலகளில் நடைபெறும் அர்ச்சனை தவிர்த்த தினப்படி வேலைக்ள் எல்லாம் பெரும்ப்ப்லும் பிராமணரல்லாதோர் செய்கிறார்கள். வேதம் கற்பதில் மட்டும் ஏன் விதிவிலக்கு? இனியாவது சில வேதபாடசாலைகள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்...( எதிர்பார்ப்பு மட்டுமே இப்பொழுதைக்கு என்னால் முடியும்)..அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் பலமாக நடைமுறைபடுத்தப்பட ஆர்.எஸ்.எஸ் விஹெச்பி போன்ற அமைப்புகள் துடிப்புடன் செயல்படுமா?




Sunday, March 29, 2009

திருமண மண்டப பேச்சுக்களும் பாடல்களும்.....

சென்ற வாரம் எங்க வீiட்டுக்கு பக்கத்திலிருக்கும் கலயாண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்றா பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தனர்.

மாடு செத்தா மனுஷன் திம்பான் என்று நடனமாடிக்கொண்டிருந்தனை மக்கள். திடீரென்று ஞானோதயம் வந்தார்ப்போல மெலடியாக பாட ஆரம்பித்தனர்...

”மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே..” 
டேய் இன்னைக்கு ரிசப்ஸ்ஷன்...நாளைக்குத்தான் கல்யாணம் என்று யாeனும் சொன்னால் eவலை என்று நினைத்துக்கொண்டிருந்த் போதே அந்த பாட்டு முடிந்து அடுத்த பாட்டு....

“ பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...கருடா செளக்கியமா?”

இது கணவன் மனை பிரிவை மையமாக கொண்ட பாடல் என்பது தெரிஞ்ச விஷயம்...

மறுநாள் கல்யாணம் முடிந்தது ஒரு சிறப்பு அழைப்பாளர் பேச அழைக்கப்பட்டார்... பாவம் மனுஷன் பேச ஆளே இல்லாமல் கஷ்டப்படிருப்பார் போல... காவிரியில் தண்ணி வரல...கிரிக்கெட்டுனா நமாளுங்க வேலைய விட்டுட்டு பார்க்குறாங்க...நாம இயற்கையை மதிக்காமல் போனால் இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு சுனாமி வரும்....
ஆகவே நீடூட்டி வாழ்கவென மணமக்களை வாழ்த்துகிறேன்...

அதுவும் சரிதான்....

.ஏ.ஆர். முருகதாஸ் கல்யாணத்தில்தான் விஜயகாந்த் பாமகவை வம்புக்கிழுத்தார்...காடுவெட்டி குருவை கலைஞர் கைது செய்யாப்போவதாக அறிவித்தது பாமக கூuட்டணிக்கு முழுக்கு போட ஆரம்பித்ததும் ஒரு கல்யாண வீiட்டில்தான்...

பாட்டு பேச்சு எதுவுமே கல்யாணத்துக்கு சம்பந்தமில்லையே...ஆனா அதுதானே நம்ம கலாச்சாரம்..

இப்படி நினைச்சுக்கிட்டிருந்தப்பதான் இன்னைக்கு நண்பர் சதீஷும் நானும் திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ”அடங்கிய” கோயிலுக்கு சென்றோம்...

அதனால் பட்டினத்தார் பாடல்களை  படித்து வந்தேeன்... அப்போதான் ஒரு விஷ்யம் பளிச்சிட்டது...

நம்ம பட்டினத்தாரையும் ஒரு கல்யாண வீiட்டுக்கு மணமக்களை வாழ்த்திபேeச கூப்பிட்டு போoயிருக்காங்க...அங்க அவர் வாழ்த்திய வாழத்து இருக்கே...அப்பப்பா...

நாப்பிளக்கப் பொய் உரைத்து நவநிதியம் தேடி  
நலன் ஒன்றும் அறியாத நாரியரைகூடிப்  
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல 
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் 

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்  
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல  
அகப்பட்டீர் அகப்பட்டீர் அகப்பட்டீரே..

ஆகா இவர் பரவாயில்லை...சப்ஜெக்ட் மாறல...சொல்லவந்ததை கரெக்டா பேசிட்டாரு...

Tuesday, February 24, 2009

எற்றோமற் றெற்றோ மற்றற்று..

காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
காணி நிலம் வேண்டும், - அங்கு 
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை 
கட்டித் தரவேண்டும் - அங்கு 
கேணியருகினிலே - தென்னைமரம் 
கீற்று மிளநீரும். 

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் 
பக்கத்திலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும், அங்கு 
கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேணும், - என்றன் 
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் 
தென்றல் வரவேணும்.
 


பாரதி இன்னைக்குஇந்த பாடலை பாடினால் அவனை ஒரு பேராசைக்காரன் என்று முத்திரை குத்திடுவேன். பரவாயில்லை....அவன் பகல் கனவு காண்றவன் தானே என்று மன்னிச்சும் விடுவேன்...அது என் அப்போதைய மனநிலையை பொருத்து இருக்கும்.

இன்றைக்கு பாரதியின் ஆசையை நான் நிறைவேற்றிக்கொள்ள நினைச்சா 1 கோடி தேவைப்படும். இந்த கோடி,  நிலத்தை வாங்கி தென்னை நட்டாலே சரியாப்பூடுமே......மாளிகை கட்டணும்னா இன்னொரு கோடி அட்லீஸ்ட் 70 லட்சம் ( டபுள் பெட்ரூம் ட்யூப்லெக்ஸ் போதும்).

இந்த 2 கோடியும் நான் யாருக்கு த்ரணும்? நா...ப்பது பர்செண்ட் நாட்டுக்கு...வெறும் அறுவது புரோக்கருக்காம்...அதுவும் காசா தரணும்...காசோலை நாட் அக்செப்டெட். அந்த காசை அவர் என்ன பண்ணுவாரு? அவரும் காசாத்தானே செலவழிக்கணும்..யானைக்கு அல்வா வாங்கியது பூனைக்கு ஹக்கீஸ் வாங்கியது என செலவாகும். புரியலையா? பணப்புழக்கம்பா...இப்படியே சென்னையில் மட்டும் புழங்கிய பணம் எவ்வளவு இருக்கும் என சென்னையில் இருக்கும் வீடுகளை பார்த்து கணக்கு போட்டால்...ஆஹா.....கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி....

குழந்தை வளர்ந்து பெரிசானதும் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கணும்...நல்லா கல்யானம் பண்ணணும்...கவலையே இல்லை...ஒரு ப்ளாட்டை வாங்கி போட்டாச்சு...இப்போ 3 லட்சம் 20 வருஷம் கழிச்சு...அப்படியே 20 இல்லை 30 டைம்ஸ்...

அரசாங்கத்துக் இது தெரியாதா? 

அது எப்படி தெரியும்...??கண் முன்னாடியே கண்ணுல மண்னை தூவிட்டே பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் லாரியிலே அள்ளிட்ட்டு போறாங்க...அதுவே தெரியல . இது எப்படி தெரியும்...

அட...அந்த மக்களோட கஷ்டம் தெரியாம பேசறீயே கோவாலு...அவிங்க் ஊர்ல ஆறு வத்தவே வத்தாது அப்புறம் எப்படி மண்ணு அள்ளறது? இங்கேதான் ஆத்துல தண்ணி ஓடலையே ..லாரியும் டிராக்டரும் மாட்டு வண்டியும் ஓடுது... 

அது சரி... அப்புறம் மண்னு இல்லாம எப்படி வூடு கட்டறது ....சாப்ட் பார்க்கும்...மல்டிப்லெக்ஸும் கட்டுறது...? 
 
எற்றோமற் றெற்றோ மற்றற்று...

என்னப்பா சொல்றே...

என்ன செய்வது...என்ன செய்வது...என்ன செய்வது -ன்னு அர்த்தம்...

யாரு சொன்னா...சும்மா உளறாதப்பா...

வெண்பாவிரு காலிற் கல்லானை வெள்ளோலை
காண்பார்க்க கையா லெழுதானை பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்க பெற்றாளே
எற்றோமற் றெற்றொ மற்றெற்று..

இது ஓளவையார் பாட்டுன்னு காத்துவழி சேதி ஒண்ணு ....

பாட்டுல இருக்குற சப்ஜெக்ட் வேற...கடைசி வரி மட்டும் எல்லாத்துக்கும் பொருந்தும்...




Wednesday, February 11, 2009

நான் கடவுள்

நான் கடவுள் படத்திற்கு சில விமர்சனமும் அந்த விமர்சனங்களுக்கு பல விமர்சனங்களும் வலையுலகில் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. படத்தை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே மூன்று பதிவுகளை ஜெயமோகனும் அவரது வலை தளத்தில் இட்டிருக்கிறார்.

என் பங்கிற்கு நானும்...

எப்பொழுதும் சராசரிக்கும் கீழான விளிம்புநிலை மக்களையே சுற்றி படம் எடுக்கும் பாலா, இந்தமுறையும் அதே.... உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் மற்றும் வில்லனைக்கொல்லும் அகோரி சாமியார் ஆகியவர்களை சேர்க்கும் திரைக்கதையில் நான் கடவுள். மக்களிடம் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்த பிச்சைக்க்காரர்களை ஊனமாக்கும் அந்த வில்லன் பாத்திரம் உக்கிரம் என்றால் அவரது அசிஸ்டெண்ட் முருகன் ( சார்..இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களான்னு வடிவேலுவை கலாய்ப்பாரே அவர்தான்), முருகனின் அசிஸ்டெண்ட்டாக வரும் திருநங்கை ஆகியோர் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்கள். ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்தால் புரிகிறது. அதிலும் நண்டு சிண்டுவும் ஆசானாக வரும் கவிஞர் விக்கிரமாத்தித்தனும் அவரது கையிலிருக்கும் குருவி என்கிற குழந்தையும் கீச்சு குரலில் பேசுபவரும் மனதில் நிற்கிறார்கள் ( ஆஹா...எல்லோரையும் சொல்லிடுவேன் போலிருக்கே...). பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே பாடலும் ( மது பாலகிருஷ்ணாவிற்கு சிந்து பைரவி ஜேசுதாஸ் குரல்), தன் தாயிடம் ஆர்யா சொல்லும் நாலு வரி பாட்டும் ( ஐந்திரண்டு திங்களாய் நின்று போன தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே...) இசையை மீறீ மனதில் பதிந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாலா எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது ஆச்சரியம். அதிலும் ஆர்யாவின் அப்பாவ்வாக வருபவர் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார். ஆர்யா நரமாமிசம் சாப்பிடுபவர் என்பதை காட்சியாகவோ வசனமாகவோ காட்டவேயில்லை. அகோரி சாமியார் என்று சொல்கிறார் மற்றதை நாமே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆர்யாவின் அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவர் பேசும் வசனம் பத்து வரிதான் இருக்கும். ஆனால் அவர் உடலும் கண்களும் நன்றாக பேசுகின்றன. அலட்சியமும், உக்கிரமும் துள்ளலும் அவருக்கு நன்றாகவே வருகின்றது. பூஜாவும் பட்டையை கிளப்பியிருக்கிரார். ( இவருக்கு விருது கிடைக்கலாம் என பத்திரிக்கைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன).  
வசனம் ஜெயமோகன். அவரின் ஏழாம் உலகம் நாவலே அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நீiதி மன்ற காட்சியில் உள்ள ஏளனம் அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். ஏழாம் உலகம் நாவலில் வரும் முதலாளி பாத்திரம் இந்த படத்தில் வரும் முதலாளி தாண்டவனை விட மிகவும் வக்கிரமானதாக இருக்கும். இந்த பட வில்லன் நார்மல் தமிழ் பட வில்லன் தான். இவரை ஆர்யா அடித்து கொல்லும் காட்சி சடாரென ஆரம்பிக்கிறது. கொஞ்சம் நந்தாவில் வரும் முதல் சண்டைகாட்சி போல  ஒரு பில்டப்புடன் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நம் எதிர்பார்ப்பே அவர் எதிர்பாராத முறையில் படமெடுப்பார் என்பதுதான்.

படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் பிடித்திருக்கிறது என்று சொல்வேன். நன்றாக இருக்குமா ஓடுமா என்பவை எனக்கு தேவையில்லாதவை.

Monday, January 19, 2009

புத்தக கண்காட்சியில் சில மணி நேரங்கள்..


சென்ற ஞாயிறு புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதற்குமுன் அதன் தொடக்க நாளின் கடைசி கால் மணி நேரத்திற்கு முன் சென்று கடை மூடப்போன உயிர்மையிடம் கெஞ்சி சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு இரணடை காசு கொடுத்து வான்ங்கினேன்...( பணக்கஷ்டம்பா...நேரமாகிவிட்டதால் கிரெடிட கார்டை அப்போ ஏற்றுக்கொள்ளவில்லை..) வீட்டில் உள்ளவர்கள் சுஜாதா ரசிகர்கள் என்பதால் ஊருக்கு போகும் முன் அவசர அவசரமாக வாங்க நேர்ந்தது.
மீண்டும் முந்தாநாள் சென்றபோது மாலை 4 மணி. முகப்பில் தமிழக முற்போக்கு எழுதாளர்கள் சங்கம் சார்பாக குறுபடங்கள் திரையிடல் நடைபெற்றது. கோபாலய்யங்காரின் மணைவி ( புதுமைப்பித்தன் கதை...), அரவாணிகள் பற்றிய படம், மிஸ்டர் பர்பெக்ட், என் பெயர் பாலாறு ஆகிய படங்களை பார்த்தேன். சென்ற ஆண்டு கலைஞரின் புகைப்படங்கள் மட்டும் அங்கு இருந்தன. இந்த ஆண்டு தமுஎச விற்கு ஒதுக்கியது பாராட்டத்தக்கது. 
வெளிப்புற மேடையில் மணிமேகலை பிரசுரம் சார்பாக 31 புத்தகங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தனர். 31 புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் லேனா. நல்ல செய்தி. மேடையில் அறிந்த முகங்களென்றால் லேனாவைத்தவிர்த்து கவிஞர்.தமிழச்சி ( இந்த பேர்தான் பிடிக்கலை...மற்றபடி இவர் கவிதைகள் பிடிக்கும் என்று சாரு சொன்னார் ஒரு மேடையில்), விஜிபி சந்தோஷம் ( இவரும் 31-ல் ஒருவர் என பிறகு தெரிந்தது.), இயக்குநர் சேரன். தவிர நடிகை சினேகா மேடையில் பேசிக்கொண்டுந்தார். ( நன்றாகவே தமிழ் பேசுகிறார்.நடுவில் ஆங்கிலம் அவ்வ்வளவாக இல்லை..) . மற்ற விருந்தினரெல்லாம் பேசி தமிழச்சியும் சேரனும் பேச ஆரம்பிக்க ஒரு மணிநேரமாகும் என புரிந்ததால்...புத்தக கண்காட்சிக்கு உள்ளே சென்றேன். இந்தமுறை எனது இலக்கு யாமம்( எஸ்.ராமக்ருஷ்னன்)மற்றும் 0டிகிரி ( சாரு நிவேதிதா) கணையாழி கடைசி பக்கங்கள் ( சுஜாதா---ரெக்கமெண்டெட் பை சாரு நிவேதிதா). 
மீண்டும் உயிர்மைக்கு சென்றேன்..அங்கு மனுஷ்யபுத்திரன் இருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக்கொண்டபின் யாமம்,கணையாழியை கண்டெடுத்தேன்...ஸீரோடிகிரி கிடைக்கவில்லை...ஒருவேளை வேறு பதிப்பகமோ என நினைத்த போது சாரு நிவேதிதா அங்கு வந்தார். அவரை கண்டவுடன் ஒரு படபடப்பு...அவர் கதைகளை படித்ததாலோ அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டதாலோ இருக்கலாம். தயக்கத்துடன் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
சார்...நான் உங்க நீண்டநாள் வாசகன்...( கடந்த ஒரு வருஷம்தான்...)
அப்படியா சந்தோஷம்...என்ன புக் வாங்கறீங்க...
”ஸீரோ டிகிரி ...”
அவர் கிட்டத்தட்ட முறைப்பது போல தொன்றியது. ஸீரோ டிகிரி படிக்காமல் எப்படி வாச்கனானேன் என் யோசித்திருப்பார் போல...
அப்புறம் அவ்ரே அங்கிருந்த் இரண்டே இரண்டு ஸீரோ டிகிரியை காண்பித்து ஒன்றை எடுத்துக்கொடுத்தார். 
அவர் இணையத்ளத்தை படிப்பதையும்., மற்ற புத்தகங்களை படித்ததையும் சொன்னேன். ராசலீலா படித்துவிட்டு அதன்பின் ஸீரோடிகிரி படிக்க சொல்லி என் நண்பர்கள் சொன்னதை அவரிடம் சொன்னபோது சற்றே ஹெஹ்ஹே என சிரித்தார்.
ராஸலீலா ஓசியில் வாங்கி படித்ததை சொல்லாமல் அவரிடம் ஸிரோடிகிரியில் ஒரு ஆட்டொகிராப் (தமிழனின் பண்பாடுங்க)வாங்கிக்கொண்டு மற்ற ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன். சும்மா சுற்றிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது விஜிபி சந்தோஷம் பேசிக்கொண்டிருந்தார். அருகிலிருப்பவரிடம் விசாரித்தபோது தமிழச்சி பேசி முடித்துவிட்டாரென்றார். ( ஆஹா...நல்ல ஸ்பீச் மிஸ் ஆயிடுச்சே என வருத்தம்)
விஜிபி சந்தோஷம் தான் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை வாசித்தார். 
( அதாவது உரைநடையின் ஒரு வரியை இரண்டுதடவை வாசித்தார்). அதற்குப்பின் நன்றியுரையும் முடிந்து கடைசியில் ஏகப்பட்ட பிலடப்பில் சேரன் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசும்போது தனது பள்ளி நாட்களில் இலக்கியம் படிக்க முடியாமல் போனதற்கு இந்த கல்வி முறைதான் காரணம் என சாடினார். அவரது திரைப்படங்களைப்போலவே அவரது உரையும் உணர்ச்சிமயமாக இருந்தது. அவர் ஒரு நல்ல கலைஞன் நல்ல இயக்குநர் மற்றும் பேச்சாளர் என புரிந்தது.

அதன் பின் மீண்டும் தமுஎச அரங்கிற்கு சென்றேன். அங்கு தமுஎச செயலாளர் உரையாற்றிக்கொண்டிருந்தார் அதுவும் நன்றியுரைதான் என புரிந்து அங்கிருந்து கிளம்பினேன். குறும்பட திரையிடலை தவர விட்டது வருத்தமளித்தது. தினமும் வந்திருக்கலாம் என தோன்றியது.

Friday, January 16, 2009

பத்திரிக்கைகள் படித்து.... மனசு கெட்டுப்போய்...

பல நாட்களுக்குப்பிறகு நேற்று குமுதம் வெப்சைட் பார்த்தேன். ஓ பக்கங்களுக்காகவும் தீராநதிக்காகவுமே குமுதம் வலைதளம் சென்று வந்திருந்தேன்.  அதன் தனிச்சிறப்பான  ஒரு பக்க கதைகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேற்று அது எதுவுமே படிக்கவில்லை. இரு நடிகனின் கதை மட்டுமே படித்தேன். கல்லூரி நாட்களில் விடுதியில் படித்த சரோஜாதேவி மற்றும் வாலிப விருந்து கதைகளை மீண்டும் படிப்பது போல ஒரு எண்ணம். விற்பனையை அதிகரிக்க இது மாதிரியான காரியங்களில் இறங்குகிறார்கள். அதை படித்ததும் ஆரம்பத்தில் ஒரு நடிகையை பற்றி கற்பனை வந்தாலும் பிறகு வருத்தமே மிஞ்சியது...இந்த இழவிற்கு பதிலாக அறிந்தும் அறியாமலுமே ஞாநியை எழுத வைத்தால் நன்றாக இருக்கும்

பாவம் நம் நடிகர்கள்...காவிரியானாலும் நெய்வேலியானாலும் ஈழமானாலும் முதலில் அவர்கள் தலையை உருட்டுவதே பத்திரிக்கைகள் வேலையாகிவிட்டது. இப்பொழுது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் போட்டு ( கற்பனை என்றாலும்) விற்பனையாக போகிறது. என்னத்தான் நடிகனின் கதை என்கிற தலைப்பு  இருந்தாலும் அது நடிகைகளை பற்றி மட்டுமே படம் வரைந்து பாகங்களை குறிக்கப்போகிறது என்பது முதல் பத்தியை பார்த்தபோதே புரிந்தது. பின்னே நடிகனின் திறந்த மேனியை பார்க்கவா தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது??

அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார். 

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....

Thursday, January 15, 2009

எனது முதல் பதிவு

முதல் பதிவு இன்றைக்கு போட்டுள்ளேன்...
ஒருவழியாக ப்ளாக் ஆரம்பித்துவிட்ட மனநிறைவோடு.