Sunday, March 29, 2009

திருமண மண்டப பேச்சுக்களும் பாடல்களும்.....

சென்ற வாரம் எங்க வீiட்டுக்கு பக்கத்திலிருக்கும் கலயாண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்றா பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தனர்.

மாடு செத்தா மனுஷன் திம்பான் என்று நடனமாடிக்கொண்டிருந்தனை மக்கள். திடீரென்று ஞானோதயம் வந்தார்ப்போல மெலடியாக பாட ஆரம்பித்தனர்...

”மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே..” 
டேய் இன்னைக்கு ரிசப்ஸ்ஷன்...நாளைக்குத்தான் கல்யாணம் என்று யாeனும் சொன்னால் eவலை என்று நினைத்துக்கொண்டிருந்த் போதே அந்த பாட்டு முடிந்து அடுத்த பாட்டு....

“ பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...கருடா செளக்கியமா?”

இது கணவன் மனை பிரிவை மையமாக கொண்ட பாடல் என்பது தெரிஞ்ச விஷயம்...

மறுநாள் கல்யாணம் முடிந்தது ஒரு சிறப்பு அழைப்பாளர் பேச அழைக்கப்பட்டார்... பாவம் மனுஷன் பேச ஆளே இல்லாமல் கஷ்டப்படிருப்பார் போல... காவிரியில் தண்ணி வரல...கிரிக்கெட்டுனா நமாளுங்க வேலைய விட்டுட்டு பார்க்குறாங்க...நாம இயற்கையை மதிக்காமல் போனால் இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு சுனாமி வரும்....
ஆகவே நீடூட்டி வாழ்கவென மணமக்களை வாழ்த்துகிறேன்...

அதுவும் சரிதான்....

.ஏ.ஆர். முருகதாஸ் கல்யாணத்தில்தான் விஜயகாந்த் பாமகவை வம்புக்கிழுத்தார்...காடுவெட்டி குருவை கலைஞர் கைது செய்யாப்போவதாக அறிவித்தது பாமக கூuட்டணிக்கு முழுக்கு போட ஆரம்பித்ததும் ஒரு கல்யாண வீiட்டில்தான்...

பாட்டு பேச்சு எதுவுமே கல்யாணத்துக்கு சம்பந்தமில்லையே...ஆனா அதுதானே நம்ம கலாச்சாரம்..

இப்படி நினைச்சுக்கிட்டிருந்தப்பதான் இன்னைக்கு நண்பர் சதீஷும் நானும் திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ”அடங்கிய” கோயிலுக்கு சென்றோம்...

அதனால் பட்டினத்தார் பாடல்களை  படித்து வந்தேeன்... அப்போதான் ஒரு விஷ்யம் பளிச்சிட்டது...

நம்ம பட்டினத்தாரையும் ஒரு கல்யாண வீiட்டுக்கு மணமக்களை வாழ்த்திபேeச கூப்பிட்டு போoயிருக்காங்க...அங்க அவர் வாழ்த்திய வாழத்து இருக்கே...அப்பப்பா...

நாப்பிளக்கப் பொய் உரைத்து நவநிதியம் தேடி  
நலன் ஒன்றும் அறியாத நாரியரைகூடிப்  
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல 
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் 

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்  
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல  
அகப்பட்டீர் அகப்பட்டீர் அகப்பட்டீரே..

ஆகா இவர் பரவாயில்லை...சப்ஜெக்ட் மாறல...சொல்லவந்ததை கரெக்டா பேசிட்டாரு...

No comments: