Saturday, December 31, 2022

Bye Bye 2022

2022 ம் ஆண்டும் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க வருடமாக இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. 




புனைவுகள்

இவ்வாண்டில் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவை வனம் மற்றும் புரவி இதழ்களில் வெளியாயின

கட்டுரைகள்

1) சூதாடி நாவல் குறித்த கட்டுரை கனலியில் வெளியாகியது

https://kanali.in/suthadi/


2) 'அ.முத்துலிங்கம் கட்டுரைகள்' குறித்த கட்டுரை 'ஆறாம் திணையின் கதவுகள்'தொகுப்பில் (விஜயா பதிப்பகம்)  வெளியானது


3) அல்கொஸாமா  நாவல் குறித்த கட்டுரை வல்லினம் இதழில் வெளியானது

https://vallinam.com.my/version2/?p=8562


4) வெண்முரசு குறித்த சியமந்தகம் கட்டுரை J 60 தளத்தில் வெளியானது


https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_18.html?m=1


5) விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை ஒட்டி எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் படைப்புலகம் குறித்த  இரு கட்டுரைகள் விருது அறிவிப்பை ஒட்டி வெளியாயின

https://kaliprasadh.blogspot.com/2022/09/2022.html?m=1

https://www.jeyamohan.in/176182/

நேர்காணல்

1. புரவி மாத இதழுக்காக எழுத்தாளர் இரா.முருகன் அவர்களை நேர்காணல் செய்திருந்தேன்.. நண்பர்சுரேஷ் பாபு உடன் வந்திருந்தார். அந்தப் பேட்டியை பதிவு செய்தார். நேர்காணல் இரு பாகங்களாக புரவி இதழில் வெளியாகியது.

2. மிளகு நாவல் குறித்த உரையாடலில் பங்கு பெற்றேன்

உரைகள்

1) தே- ஒரு இலையின் வரலாறு குறித்து


2) எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் எண்கோணமனிதன் நாவல்  குறித்து


3) அய்யப்பன் மகாராஜனின் மூஞ்சிரப்பட்டன் தொகுப்பு குறித்து


4) விஷ்ணுபுரம் விழாவில் சாரு குறித்து


5) எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைகள் குறித்து ஹலோ எஃப் எம் ல் மற்றும் தமிழ் ஆடியோ புக் சேனலில் பேசினேன்


ஒருங்கிணைப்பு

1. குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழாத் தொகுப்பு


நற்றுணை கலந்துரையாடல்




A. பனி உருகுவதில்லை வெளியீட்டு விழா- (ஸீரோடிகிரி பதிப்பகத்துடன் இணைந்து) - அம்மாச்சி ஹால் வளசரவாக்கம்

B.  திருமந்திரம் - எழுத்தாளர் கரு.அறுமுகத்தமிழன் - வடபழனி சத்யானந்தா யோகமையம்

C. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் :-  தொகுப்பாசிரியர் அர்விந்த் சுவாமிநாதன் -  zoom meeting 

D. காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வு :- எழுத்தாளர் கிங் விஸ்வா - வடபழனி சத்யானந்தா யோகமையம்

E.ஜீவகரிகாலன் படைப்புகள் குறித்த  உரையாடல். கூடவே ஓவியங்கள் குறித்த சுவாரஸ்யமான அரட்டைக் கச்சேரி - வடபழனி சத்யானந்தா யோகமையம்

( நற்றுணை கலந்துரையாடலுக்கு தனது யோகா மையத்தை அளித்து வரும் குருஜி செளந்தர் மற்றும் அதற்கு நிதி உதவி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறவேண்டும். உடனிருந்து ஆலோசனை வழங்கி வரும் யாவரும் பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி )

 வாசித்தவை:-

( நினைவிலிருந்து வரும் பட்டியல். அவ்வப்போது குறித்து வைக்கவில்லை. ( 2023 ன் முதல் சபதமாக இதைக்கூட வைத்துக் கொள்ளலாம்.  )


1.கம்பராமாயணம் அயோத்யாகாண்டம் (நியூ செஞ்சுரி)

2.கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் ( நியூ செஞ்சுரி)

(கம்ப ராமாயண வாசிப்பிற்கு நன்றிகூற வேண்டியவர்கள்:- இம்பர்வாரி குழுமம் மற்றும் பெங்களூரு ஹரிகிருஷ்ணன் அவர்களன்  யூட்யூப் பதிவுகள்)

3.மூத்த அகதி - வாசுமுருகவேல் ( ஸீரோடிகிரி)

4.பார்த்தீனியம் - தமிழ்நதி ( நற்றிணை)

5.மூஞ்சிரப்பட்டன் - அய்யப்பன் மகாராஜன் ( யாவரும்) 

6.அல்கொஸாமா - கனகராஜ் பாலசுப்ரமணியம் ( ஸீரோ டிகிரி)

7.உன் கடவுளிடம் போ - தெய்வீகன் (தமிழினி)

8. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்  ( கிழக்கு ) 

9.என்கோணமனிதன் - யுவன் சந்திரசேகர்

10.மிளகு - இரா.முருகன் ( ஸீரோ டிகிரி)

11.ஆஷஸ் & டைமண்ட்ஸ் - மணி எம்கே மணி (யாவரும்)

12. தே ஒரு இலையின் வரலாறு - ராய் மாக்ஸம் - தமிழில் சிறில் அலெக்ஸ் ( தன்னறம்)

14. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்:- அரவிந்த் சுவாமிநாதன் - (யாவரும்)

15. டிரங்குப் பெட்டிக் கதைகள் - ஜீவகரிகாலன் (யாவரும்)

16. கண்ணம்மா - ஜீவகரிகாலன் (யாவரும்)

17. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு - ஜீவகரிகாலன் (யாவரும்)

18.புதிய எக்ஸைல் - சாரு நிவேதிதா ( மறு வாசிப்பு) ( கிழக்கு பதிப்பகம்)

19.நரிக்குறவர் இன வரைவியல் - கரசூர் பத்மபாரதி (தமிழினி) 

20.திருநங்கையர் - கரசூர் பத்மபாரதி (தமிழினி)

21. உயிர் வளர்க்கும் திருமந்திரம் - எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் (தமிழினி)

22.அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 பாகங்கள்( நற்றிணை)

23. சியமந்தகம் - அழிசி பதிப்பகம்

24. நான்தான் ஒளரங்ஸேப் - சாரு நிவேதிதா (ஸீரோடிகிரி)

25:- பவுன்சர்  காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

26:-  லக்கிலுக் காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

 ட்ராஃப்ட் ஆக வாசித்தவை

1. ஆக்காண்டி - வாசு முருகவேல் ( எதிர்)

2. ஆழம் - சீ.முத்துசாமி ( யாவரும்)

3. பக்கார்டி - ஹரிசங்கர் (உயிர்மை)

4. மேடை உரைகள் - செல்வேந்திரன் ( ஸீரோடிகிரி)

 வாசித்துக் கொண்டிருப்பவை


1. சுவருக்குள் சித்திரங்கள் - தியாகு (விஜயா)

2. கம்பிக்குள் வெளிச்சங்கள் - தியாகு (விஜயா)

3. இரா.மீனாட்சி கவிதைகள் (காவ்யா) 

4. உலகசினிமா - தொகுப்பாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் ( உயிர்மை)



வெண்முரசு கலந்துரையாடல்களை  தொடர்ச்சியாக  நடத்தி வந்தோம். வெண்முரசுக்குப் பிறகு ஜெ. மூன்று நாவல்கள் எழுதினார். (குமரித்துறைவி/ அந்தமுகில் இந்தமுகில் / கதாநாயகி ). ஆனால் நான் வெண்முரசோடு தங்கிவிட்டேன்.  ஆனால் அவற்றை வாசிக்கவில்லை. மனது ஒன்றவில்லை. பாண்டிச்சேரியில் ஜெ.விடம் இதைக் கூறியபொழுது அது அவ்வாறே ஆகும் எனக் கூறினார்.


இவ்வருடத்தில் அவற்றை வாசிக்க வேண்டும் மற்றும் தமிழ்விக்கியில் நூறு பதிவாவது இட வேண்டும். பார்ப்போம்..


And finally,