Saturday, April 25, 2009

ஊர்க்காவலன் முதல்


நாங்கள் எங்கள் ஊரில் பச்சகுதிரை, ஓடிப்பிடிப்பது, அலேஸ்பாய் போன்ற புராதன விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடினாலும் காலத்திற்கேற்ப  அதை ரீர்மிக்ஸ் செய்து கொள்வோம்.  அது அப்பொழுது வந்த திரைப்படங்களை சார்ந்திருக்கும். திருடன் போலீஸில் திருடர்கள் கார் ஏறி தப்பிக்கும் போது காரில் ஒரு கயிற்றைகட்டி அதன் மறு முனையை தன் காலில் கட்டிக்கொண்டு காரை நிறுத்துவது ஊர்க்காவலன் ஸ்டைல். இதி கார் கயிறு போன்றவை கற்பனையாக நினைத்துக்கொள்பவை என்பதை அறிக. இது போல  தரையில் கால் படாமல் சுத்தி சுத்தி அடிக்கும் ”மனிதன்” விளையாட்டுக்களும் ஈ அடிக்கும் ”வேலைகாரன்” விளையாட்டுக்களும் உண்டு. இன்னும் பின்னோக்கி யோசித்தால்  எதுவும் நினைவில் இல்லை. நான் நினைவு தெரிந்த காலம் முதல் ரஜினி ரசிகன்.

நான் மட்டும்தான் என்றில்லை. எங்க செட்டில் எல்லோருமே அப்படித்தான். சில சீனியர் நண்பர்கள் ( 10 வயசு வித்தியாசம்) ஓரிருவர்  கமல் ரசிகராக இருந்தாலும் ரஜினி படம் வந்தால் முதல்நாள் முதல் ஷோ தவறாது. ( படங்கள் பெரிய நகரங்களில் ரிலீஸாகி அங்கிருந்து தூக்கப்பட்டபின் தான் மன்னார்குடியில் ரிலீஸ் ஆகும். சுற்றியிருக்கும் திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரில் எல்லாம் முதலில் ரிலீசாகி விடும். அதன் பின் மன்னார்குடிக்கு வரும்...நான் சொலவது இந்த இரண்டாம் கட்ட ரிலீஸின் முதல் நாள் முதல் ஷோ என்பது கவனத்திற்கு...) . அந்த விதத்தில் தலைவர் படங்களில் நான் பார்த்த முதல்நாள் முதல் ஷோவில் ( இனி சுருக்கமாக முமு) முதலானது முரளியுடன் முதலில் பார்த்த ( யப்பாடி எத்தனை மு) மாப்பிள்ளை படம்.  முரளி என் அண்ணன் என்பதும் உங்கள் கவனத்திற்கு.

முரளிக்கு ஏற்கனவே சென்னை ஸ்ரீநிவாஸா தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய அனுபவம் கைகொடுக்க கவுண்டரில் முட்டி மோதி கடைசியாக இருந்த இரண்டு பால்கனி டிக்கெட்டுக்களை வாங்கி விட்டான். அந்த படத்தில் தலைவர் அறிமுகம் அசத்தாலாகவே இருந்தது.
கல்யாண வீiட்டில் மோட்டர் பைக்கோடு வந்து கல்யாண பெண்ணை கடத்திக்கொண்டு போவார். 
ஒரு சண்டை காட்சியில் சிரஞ்சீவியும் வந்தது எங்களுக்கு திருப்தியாக இருந்தது. அதன் பின் நான் ஆறாவது முழுப்பரிட்சையிலும் அவன் ஏழாவது முழுப்பரிட்சையிலும் பிஸியாகி விட்டோம். பரிட்சை முடிந்த நேரம்  பணக்காரன் ரிலீஸ்.

பணக்காரன் படத்திற்கு டிடியில் விளம்பரமும் வந்தது. காரோடு  ஒரு லாரிக்குள் ஏறிவிடுவார் தலைவர். காரில் வில்லன் பாம் வைத்திருப்பார். காரில்  தலைவரின் அம்மா வேறு இருப்பார். அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் காரால் லாரியைஒ உடைத்துக்கொண்டு அவர் வெளியே வந்துவிட பின்னர் பாமும்  வெடிக்க ...விளம்பரம் முடிந்து விடும். எங்களுக்கு விளையாட்டு நேரத்தில் கூட  அந்த படததை பற்றிதான் பேச்சு ஓடியது. நம்ம ஊருக்கு வரும்போது முமு என நானும் முரளியும் பேசி வைத்துக்கோண்டோம். அப்படிபட்ட ஒரு நன்நாளில் நெத்திஅடி படம் பார்க்க லக்‌ஷ்மி  போன என் பிரெண்டு ஒருத்தன் அங்கே இண்டெர்வெல்லில் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் பாட்டு போட்டதாக சொன்னான். எங்க ஊர் தியேeட்டரில் அடுத்து போடப்போகும் படத்தின் பாடலை ஸ்பீக்கரில் போடும் பழக்கம் இருந்து வந்தது. மீண்டும் முமு மீண்டும் முரளியும் நானும் சென்று பார்த்து வந்தோம். அதில் ஊட்டி எஸ்டேட்டில்  இருக்கும் வெளிமாநில வில்லன்களை அந்தந்த மாநில பாஷை பேசி தலைவர் பெண்டு எடுக்கும் சீனை நாங்கள் எல்லோரும் பல மாதங்களுக்கு  இமிடேட் செய்து வந்தோம். தலைவருக்காக இளைய்ராஜா குரல் கொடுத்த உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடலினை என் நண்பன் பாட்டுப்போட்டியில் பாடி எங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடயே ஆறுதல் பரிசை வாங்கிகொண்டான். 

அடுத்து ராஜாதிராஜா படத்தில் கோழையாக் இருந்து வீiரனாக மாறுவார்..மீனம்மா...மீனம்மா பாடலில் கோட் சூட் போoட்டு கையை மடக்கி விட்டுக்கொண்டு வருவார். யே ஜமாலக்கடி கிரி க்ரி என்று ராதாரவி கையில் பாம்பை கொண்டு வருவார்...கத்தியை அந்தரத்தில் சுழல விடுவார்..ஆக அந்த படமும் எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது...( எங்கள் ஊரில் முப்பது நாள் ஓடுவதே மிக அதிகம்)

அதற்கிடையே கொடி பறக்குது தர்மதுரை போன்ற நேரடி படங்களும்  நாட்டுக்கொரு நல்லவன் வீiட்டுக்கொரு நல்லவன் என்று இந்தி டப்பிங் படங்கள் வரிசையாக வர அதையும் பார்த்து ரசித்தோம். 

நான் எட்டாவது படித்த காலத்தில் வந்த  தீபாவளியன்று தளபதி ரிலீஸ்.  டிடியில் மங்கள இசை ஜெயேந்திரர் அருளுரை ஆகியவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டு புதுப்பட பாடலுக்காக வெயிட்டிங்கில் இருந்தோம். கொஞ்சநேரம் காக்க வைத்து பின் ராக்கம்மா கையதட்டு பாடல் ஒளிபரப்பானது. கைதட்டி மிக்ஸரையெல்லாம் தரையில் கொட்டி அதகளமாகி விட்டது. இதில் கவனிக்க வேeண்டிய ஒரு முக்கிய விஷயம் எங்கள் தெருவில் இரண்டு பேர் வீiட்டில்தான் அப்பொழுது டிவி இருந்தது. அவர்களில் ஒருவர்தான் படம்பார்க்க உள்ளே விடுவார். ஒட்டுமொத்த பசங்களும் அன்று அவர் வீiட்டிதான் இருந்தோம். பிறகு வெடி வெடிக்க கிளம்பிவிட்டோம். அந்த தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கூட ரிலீஸான  கமலின் குணா திரைப்படம் அபாரமாக மண்ணைக்கவ்வியது. குஷ்பூ இருந்ததால் பிரம்மா தப்பித்தாலும் தலைவர் முன்னால் நிற்க முடியவில்லை. அப்பொழுது வந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளிலெல்லாம் தலைவர் குளத்து படிக்கட்டில் உட்கார்ந்து திரும்பிபார்க்கும் ஸ்டில்கள்தான். பொங்கலன்று மன்னன் ரிலீஸ்...
அந்த படததை கும்பகோணத்தில் பார்த்தோம். சின்னக்கவுண்டர் வேறு வெற்றியடைந்ததால் பலமான் போட்டி.

இப்படி சாத்வீமாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் அண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது நாங்கள் செட் சேர்ந்துவிட்டோம்...கிட்டத்தட்ட 10 பேர் ஒன்றாக சென்று அண்னாமலை படம் பார்த்தோoம்...அதில்தான் முதன் முதலில் ரஜினி பேர் போடுவதற்கு முன் சூப்பர்ஸ்டார் என்று லோகோ வந்தது. எங்களுக்கு ஒரே உற்சாகம். முன் சீiட்டில் இருந்தவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள்... வந்தேண்டா பால் காரன் பாடு வந்த்போது  ரஜினி இண்ட்ரோவில் சூடம் காட்டி தேங்காய் உடைத்தார்கள்....இத்தனைக்கும் முக்கிய காரணம் அண்ணாமலை படம் எங்கள் ஊரில் முதல்நாளே  ரிலீஸானதுதான். 

அதன் பின் வந்த பாண்டியன், எஜமான் உழைப்பாளி, வீiரா படங்கள்  வந்த்போது முரளி ஊரில் இல்லாததாலும் 10 வகுப்பு தேeர்விலும் ஹிந்தி ப்ரவீiன் தேர்வுகளில் பிஸியாகி விட்டதாலும்
முமு மிஸ்ஸாகிவிட்டது. 

பிறகு நாகப்பட்டிணத்தில் டிப்ளமோ சேர்ந்த போது பாட்ஷா வெளியானது. அந்த படததை மன்னார்குடியில்தான் பார்த்தோம்...இண்டெர்வெல் வரை சண்டையே வரல.... ஆனால் படத்தில் செம பில்டப்.  இண்டெர்வெல் வருவதற்கு முன்னாடி ஒரு ஃபைட்டும் அதைத்தொடர்ந்து  “நான் ஒருதடவை சொன்னா...” பஞ்ச் டயலாக்கும் தேவாவின் பாட்சா...பாட்சா..ன்னு eகிரவுண்ட் இசையும் பட்டைய கிளப்ப...பல இடங்களில் டயலாக்கே கேட்க முடியல...அந்தளவிற்கு கைத்தட்டல்...விசில்ன்னு அதகளம்தான்...அதுல எங்கிட்டே இருக்கிற கூடாம் நான் சேர்த்த் கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த்ந் கூட்டம்-னு தலைவர் சொல்லும்போது  எங்க ஊர் மன்ற செயலாளர் சட்டைய கழட்டி ஸ்கிறின் முன்னால நின்னு தலைவான்னு ஒரு ஆட்டம் போட்டாரு.

எங்க பார்த்தாலும் பாட்சா தான் பேச்சே...தலைவர் அரசியலுக்கு வரப்போறாருன்னு வேeற பத்திரிக்கை செய்தி. இந்த மாதிரி இருக்கும்போது முரளியை பார்க்க திருச்சி போனபோது ரம்பா ஊர்வசி தியேட்டரில் முத்து படம் பார்த்தோம்...முதன் முதலில் நாங்கள் சேர் மீது ஏறி நின்று ஆடியது அப்பொழுதுதான்.  எங்கள் முன்சீட்டில் இருப்பவர்களும் நின்று கொண்டிருந்ததும் அதற்கு காரணம்.
அதில் அப்பா ரஜினி சொத்தை விட்டு விட்டு போகும் போது வர்ம் விடுகதையா பாடலில் டபுள் மீநிங் இருந்தது. அவர் அரசியலுக்கு வர்வாருன்னு சொன்னாங்க... அப்படி அவர் அரசியலுக்கு வந்துட்டு சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திட்டா அப்புறம் யார் படத்தையும் ”முமு” பார்ப்பதில்லை என்று நாங்கள் உறுதி எடுத்துக்கொண்டோம். அப்புறம் தலைவர் அரசியலுக்கு வராப்போறதில்லை.. அடுத்த படம் அருணாச்சலம்-ன்னு அறிவிச்சாரு.

அருணாச்சாலம் ரிலீசப்போ எனக்கு டிப்ல்ளமோ ஃபைனல் இயர் computer application  பிராக்டிகல். எக்ஸ்டெர்னலா வந்தவர் என்னிடம் கேள்வி கேட்டுக்கிட்டிருந்தப்போ பசங்கல்லாம் எனக்காக வராண்டாவில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கிட்டிருந்தாங்க...நியும் அவங்களொட அருணாச்சலம் படம் பார்க்க போறியான்னும் கேட்டாரு...எவனோ ஒளறிட்டான்னு  புரிஞ்சது. 
ஹி..ஹி..ன்னு சிரிச்சுட்டு வெளியே வந்து பஸ்ஸை பிடிச்சு தியேeட்டருக்கு போய் படத்தை பார்த்தோம்...படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை...பாட்டும் மொக்கையாக இருந்தது...இன்னும் எக்ஸாம் இருந்ததால எங்களால ரொம்ப ஆட்டமும் போட முடியல...மதத ரசிகர்கள் எல்லோரும் எப்பவும்போல கலக்கிக்கிட்டு இருந்தாங்க. அனாலும் படம் நூறுநாள் ஓடியது. இது தலைவர்க்கு மட்டுe சாத்தியம்-னு தினமனிக்கதிரில் போட்டிருந்தாங்க. 

அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு பெங்களுருக்கு ஒரு இண்டெர்வியூ-க்கு போயிட்டு வந்தேன். இண்டெர்வியூ செம மொக்கை.   அப்போதான் படையப்பா ரிலீஸாச்சு. சரீனு தியேட்டருக்கு போயிட்டேன்...சென்னை உதயம் தியேட்டர்...இது அருணாச்சலம் மாதிரி இல்லை...நல்ல வேகம்...ரம்யா கிருஷனன் தமிழ் ஃபீப்ல்டுக்கு ரீஎண்ட்ரி ஆனாங்க. தலைவர் கூuட நடிச்ச நடிகைங்க எல்லோருமேe நல்லா பிக்கப் ஆவாங்க. அதுதான் தலைவரின் ராசி...(ஆனால் கமலோடு நடிச்சா ஃபீல்ட் அவுட்டுதான்). இந்த படமும் பட்டைய கிளப்பிடுச்சி..க்ளைமாக்ஸும் திருப்தியா இருந்தது. கேe.எஸ். ரவிகுமார் பத்தியும் கமர்ஷியல் படத்துக்கான திரைக்கதைன்னா என்னங்கிறதையும் இந்த படத்த பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

பாபா............ஆந்திராவில் இருந்து இந்த படம் பார்க்க நான் சென்னைக்கு வந்தேன்...ஒரு நாள் லீவில் வந்து படம் பார்க்க முடியலைன்னா என்ன பன்றதுன்னு ரெண்டு பசங்க கிட்டே சொல்லி படத்துக்கு ரெண்டு தியேட்டரிலே ரிசர்வ் செய்ய சொல்லியிருந்தேன். ரெண்டுமே புக்காயிடுச்சி... முதலில் ரோகினி தியேட்டரில் பார்த்தோம்... படம் இண்ட்ரொடெக்‌ஷன் எல்லாம் நன்றாகவேe இருந்தது...பாபா முத்திரையோட  தலைவர் ஸ்டைலா நிப்பார்...அப்புறம் ஸ்கிரீனை பார்த்து புர்ர்ர்ர்ர்...ன்னாரு ( டிப்பு டிப்பு பாடு ஸ்டார்ட்டிங்). அப்பவே கொஞ்சம் ஷாக்காயிட்டோம்...அதுக்கப்புறம் மந்திரியை பார்க்க பைக்க எடுத்திக்கிட்டு சர்..ன்னு போறதுன்னு ஏகப்பட்ட சொதப்பல்ஸ்...அவர் உடம்புல சக்தி வருவதும்...பட்டத்தை கீழே இறக்குறதும் பார்த்து கொஞ்சம் மெரசலாகி வெளியே வந்தோம்.  இருந்தாலும் ரெண்டாவதா புக்கான டிக்கெட்டையும் வச்சு அன்னைக்கே இன்னொருவாட்டி பார்த்தேeன்...ரசிகருங்க எல்லாம் படம் ஆரம்பிக்குபோது ரொம்ப பரபரப்பா இருந்தாங்க அப்புறம் டல்லாயிட்டங்க இத நேராவே பார்க்க முடிஞ்சது...

அப்புறம் தேர்தலில் பாமகவுக்கு எதிரா பேசினாரு தலைவர்...ஆனால் பாமக ஜெயித்துவிட்டது. ஜக்குபாய் படம் ட்ராப் ஆனது. தமிழ் ஃபீல்டில் விக்ரம்தான் நம்பர் ஒன் -னு குமுதத்திலேe கவர்ஸ்டோரி வேற போட்டாங்க...இந்த நேரத்தில் தான் சந்திரமுகி படம் ரிலீiஸ் பண்ணினாரு..விஜயோட சச்சின் படமும் வந்தது. ” ரஜினிக்கு நான் ( கவனிக்க...ரஜினிக்கு) போட்டி இல்லை...ஒரு திருநாள்ன்னா எல்லார் படமும்தான் வரும் ...எது நல்ல படம் -னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் விகடனில் பேட்டி கொடுத்தார். நான் யானை இல்லை குதிரை; எப்படி இருக்கணுங்கறதைவிட எப்படி இருக்கக்கூuடாதுங்கறது முக்கியமுன்னு ஆடியோ ரிலீஸில் தலைவர் பேசினார்..எனக்கு மிகவும் உறசாகமானது.  அந்த நேரம் பார்த்து முரளியும் மதுரையில் இருந்து ஒரு வேeலை விஷயமாக சென்னை வந்திருந்தான். அருணாச்சலம் பாபா படம் தவிர மத்ததெல்லாம் அவனோட சேர்ந்துதான் பார்த்திருந்தேன்...அந்தவகையில்  எங்கள் வெற்றிக்கூuட்டணி மீiண்டும் இணைவதால் படம் வெற்றி...அதில் கடைசியில்  வேட்டையன்  லகலகலக மிரட்டிடுச்சி.. அதைவிட ஜோதிகா லகலக சொல்லும் சீன் தியேட்டரேe அதிர்ந்தது. எங்கு பார்த்தாலும்  சந்திரமுகிதான். லோக்கல் கேபிளில், பஸ்ஸில் என்று இதுவரை  20தடைவை பார்த்திருப்பேன்...அப்பொழுது ரிலீசான கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃப்ளாப்...ஆனா மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று வரை கமலின் சிறந்த 5 படங்களில் ஒன்றாக நான் அதை நினைக்கிறேன். சச்சினும் ஃப்ளாப்...” நான் அப்பவே சொன்னேன்...சூuப்பர் ஸ்டார் ( கவனிக்க இப்போ..சூப்பர் ஸ்டார் ) கூட என் படத்தை வெளியிடாதீங்கன்னு...புரொடியூசர்தான் கேக்கலை” ந்னு அப்படியே ஒரு பல்டி பேட்டி கொடுத்தார் விஜய்...

ஷங்கர் டைரக்‌ஷனில் சிவாஜி படம் அறிவித்தார் தலைவர். சிவாஜி படம் ரிலீiஸின் போது சத்யம் தியேட்டரில் ஈவ்னிங் ஷோ முன்பதிவு செய்துவிட்டேeன். ஆனால் கலை எட்டு மணிக்கே என் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான்...” டே தியேட்டரில் இருக்கேண்டா...சுத்தி பத்தாயிரம் பேர் நிக்கிறப்போ போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜீiப்பில் வந்து தலைவர் இறங்குறார்டா...” அதுக்கப்புறம் வேலையேe ஓடலை..ஒரு வழியா சாயங்காலம்  தியேட்டரில் உட்கார்ந்தா......கைதட்ட மாட்டாங்களாம்...விசிலடிக்க மாட்டாங்களாம்...கேட்டா தியேட்டர் கட்டுப்பாடாம்...அதையும் மீiறி நாங்க ஒரு நாளு பேர் கைத்தட்டலும் விசிலுமா ரகளை பண்ணிட்டுத்தான் வந்தோம். ஆனால் இனிமே தலைவர் படத்துக்கு சத்யம்ல மட்டும் ”முமு”  போகக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்.

படத்தில் இவர் கெஸ்ட் ரோல் என்றாலும்...அடுத்து குசேலன்  அந்தளவிர்கு பரபரப்பாகவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். 

இப்பொழுது தமிழ் படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை...சினிமா பற்றிய அறிவு கொஞ்சம் அதிகமாகிவிட்டுக்கிறது.  கமர்ஷியல் படங்கள் மீதான ஈர்ப்பும் குறைந்து விட்டது . தலைவர் படம் மட்டும் இதில் விதிவிலக்கு...

ரோபோ ரிலீஸ் தேதி அறிவித்தவுடம் எனக்கும் முரளிக்கும் ”முமு”  டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும்...


1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in