Friday, January 16, 2009

பத்திரிக்கைகள் படித்து.... மனசு கெட்டுப்போய்...

பல நாட்களுக்குப்பிறகு நேற்று குமுதம் வெப்சைட் பார்த்தேன். ஓ பக்கங்களுக்காகவும் தீராநதிக்காகவுமே குமுதம் வலைதளம் சென்று வந்திருந்தேன்.  அதன் தனிச்சிறப்பான  ஒரு பக்க கதைகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேற்று அது எதுவுமே படிக்கவில்லை. இரு நடிகனின் கதை மட்டுமே படித்தேன். கல்லூரி நாட்களில் விடுதியில் படித்த சரோஜாதேவி மற்றும் வாலிப விருந்து கதைகளை மீண்டும் படிப்பது போல ஒரு எண்ணம். விற்பனையை அதிகரிக்க இது மாதிரியான காரியங்களில் இறங்குகிறார்கள். அதை படித்ததும் ஆரம்பத்தில் ஒரு நடிகையை பற்றி கற்பனை வந்தாலும் பிறகு வருத்தமே மிஞ்சியது...இந்த இழவிற்கு பதிலாக அறிந்தும் அறியாமலுமே ஞாநியை எழுத வைத்தால் நன்றாக இருக்கும்

பாவம் நம் நடிகர்கள்...காவிரியானாலும் நெய்வேலியானாலும் ஈழமானாலும் முதலில் அவர்கள் தலையை உருட்டுவதே பத்திரிக்கைகள் வேலையாகிவிட்டது. இப்பொழுது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் போட்டு ( கற்பனை என்றாலும்) விற்பனையாக போகிறது. என்னத்தான் நடிகனின் கதை என்கிற தலைப்பு  இருந்தாலும் அது நடிகைகளை பற்றி மட்டுமே படம் வரைந்து பாகங்களை குறிக்கப்போகிறது என்பது முதல் பத்தியை பார்த்தபோதே புரிந்தது. பின்னே நடிகனின் திறந்த மேனியை பார்க்கவா தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது??

அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார். 

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....

2 comments:

Nithi... said...

அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார்.

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....///


வெச்சிட்டாங்க ஆப்பு
அட நண்பா உங்க மொழி
நடை சூப்பர் ha இருக்கு
எழுதுங்க எழுதுங்க நாங்க படிக்கிறோம்..!

காளி said...

வருகைக்கு நன்றி நிதி....